மேலும் அறிய

Cuddalore Train Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?

கடலூர் செம்மங்குப்பம் அருகே ரயில் மீது பள்ளி வேன் மோதிய சம்பவம் எப்படி நடந்தது? என்ன காரணம்? என்பதை விரிவா காணலாம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன், ரயில் மோதி மீது விபத்துக்குள்ளான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியுள்ளது. 

கோர விபத்து நடந்தது எப்படி?

இந்த கோர விபத்தால் தற்போது வரை 2 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விபத்திற்கு காரணம் என்ன? இந்த விபத்து நடந்தது எப்படி? என்பதை விரிவாக காணலாம். 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே செம்மங்குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ரயில் வந்து செல்லும் தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தின் வழியாக சாலையும் அமைக்கப்பட்டிருப்பதால், பொதுமக்களின் இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இதன் வழியாகவே செல்வது வழக்கம். இந்த தண்டவாளத்தில் கடலூர் - மயிலாடுதுறை ரயில் செல்வது வழக்கம் ஆகும்.


Cuddalore Train Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?

தூங்கிய கேட்கீப்பர்:

கடலூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் வழக்கம்போல இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டு மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வழக்கமாக ரயில் வரும் நேரத்தில் இந்த கிராசிங்கில் கேட்கீப்பர் கேட்டை மூடி வைப்பது வழக்கம் ஆகும். 

ஆனால், இன்று கேட்கீப்பர் அலட்சியமாக தூங்கியுள்ளார். இதனால், ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. இன்று துரதிஷ்டவசமாக ரயில் வரும் நேரத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று அந்த வழியாக வந்துள்ளது. பள்ளி வேன் ஓட்டுனர் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததால், ரயில் வரவில்லை என்று கருதி பள்ளி வேனை இயக்கியுள்ளார். 

உருக்குலைந்த பள்ளி வேன்:


Cuddalore Train Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?

ஆனால், அந்த நேரத்தில் கடலூர் -மயிலாடுதுறை ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, ரயில் பள்ளி வேனின் மையப்பகுதியிலே மோதியது. இதில் பள்ளிக்குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் 50 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. ரயில் மோதிய வேகத்திற்கு பள்ளி வேன் உருக்குலைந்தது.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அலறியடித்துக் கொண்டே ஓடி வந்தனர். பள்ளி வேன் மீது மோதிய ரயிலும் சில அடி தூரத்தில் நிறுத்தப்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வேனின் உள்ளே பார்த்தபோது, பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தனர். 

உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்:

உடனடியாக காவல்துறையினருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த மாணவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது வரை 2 மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

தக்க சமயத்தில் கேட்டை மூடாததே இந்த கோர விபத்திற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் ரயில்வே கேட்கீப்பரை சரமாரியாக தாக்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரயில்வே போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

சோகத்தில் தமிழ்நாடு:

இந்த சம்பவத்தில் வேன் உருக்குலைந்த நிலையில், உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget