கடலூர் : பட்டுப்புடவை.. சீர்வரிசை பொருட்கள்.. காதல் ஜோடிக்கு திருமணம் நடத்திவைத்த இன்ஸ்பெக்டர்
காதல் ஜோடிகளுக்கு சொந்த செலவு பட்டுப்புடவை எடுத்து வைத்து திருமணம் செய்து வைத்த ஆய்வாளர்.

மேலும் ஒரு செய்தி கடலூரில் இருந்து..
மறைந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் உடலுக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் அஞ்சலி.
கடந்த 1991-1996 அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் பால்வள மற்றும் கால்நடை துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஜனார்த்தனன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார் அவரது உடல் அவர்கள் சொந்த ஊரான கடலூர் அண்ணா நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத், கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கடலூர் பாரதி சாலையிலிருந்து ஊர்வலமாக வந்து மறைந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட செயலாளர், அதிமுக எம் ஜி ஆர் மன்ற செயலாளர், மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பு பெற்றவர் ஜனார்த்தனன்.
இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கடலூர் வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் சேவல் குமார், பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Before You Go
நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
ட்ரெண்டிங் செய்திகள்






















