மேலும் அறிய

Cuddalore: வேகத்தால் அதிகரிக்கும் விபத்துகள்.. வேகத்தடை கேட்டு போராடிய மக்கள்.. நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியர்!

கடலூர் மாவட்டம்பண்ருட்டி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பேருந்துகளை திடீர் ஆய்வு செய்தனர்.தனியார் பேருந்து உரிமையாளர்கள், மற்றும் ஓட்டுநர்களுடன் காவல் துறையினர் விபத்து தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
 
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணித்த 80 க்கும் மேற்பட்டோர் தற்போதும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Cuddalore: வேகத்தால் அதிகரிக்கும் விபத்துகள்.. வேகத்தடை கேட்டு போராடிய மக்கள்.. நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியர்!
 
இதேபோன்று திருக்கண்டேஸ்வரம் பகுதியில் நடந்த மற்றொரு விபத்தில், தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து டிராக்டர் மீது மோதியதையடுத்து அப்பகுதி மக்கள் வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் பேருந்துகள் மற்றும் வானகங்கள் கட்டுப்பாடின்றி வேகமாக செல்வதால் இந்த பகுதியில் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதை தடுக்க, தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வெகுநாட்களாக வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக ஆட்சியர் அருண் தம்புராஜ்க்கும் தனிப்பட்ட முறையில் தகவல் பெறப்பட்டத்தாக தெரிவித்தார்.
 
இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் பகுதியில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க முடிவு செய்து மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, வெள்ளக்கேட், வரக்கால்பட்டு, நத்தப்பட்டு, ஆஞ்சநேயர் கோவில் ஆகிய பகுதிகளில் 12 இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் விபத்து நடந்த இடத்தில் முதற்கட்டமாக பெரிய அளவிலான வேகத்தடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் 5 இடங்களில் பெரிய அளவிலான வேகத்தடையும், 6 இடங்களில் சிறிய அளவிலான வேகதடையும் என 12 இடங்களில் உடனடியாக வேகத்தடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதேபோல வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Cuddalore: வேகத்தால் அதிகரிக்கும் விபத்துகள்.. வேகத்தடை கேட்டு போராடிய மக்கள்.. நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியர்!
.
 கடலூர், பண்ருட்டி தாலுக்காவில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக சாலை விதிகள் மற்றும் விபத்துகளை தவிர்க்கும் விழிப்புணர்வு கூட்டம் வரகால்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இந்த விழிப்புணர் கூட்டத்தில் பண்ருட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா மற்றும் கடலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு கலந்து கொண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் நமது மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் எந்த ஒரு விபத்தும் ஏற்படுத்தாதவாறு மிக கட்டுப்பாடுடனும் குறைந்த வேகத்தில் பேருந்து இயக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் கடலூர் பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் ஆய்வாளர்கள் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Muttukadu Boat House : முட்டுக்காடு SUMMER SPECIAL 1 DAY PLAN-க்கு ரெடியா? இவ்வளவு OFFER இருக்கா?Suchitra interview  : ”ஐஸ்வர்யா நல்ல அம்மாவா? என் சப்போர்ட் தனுஷூக்கு தான்” பகீர் கிளப்பிய சுச்சிGV Prakash Saindhavi Divorce : ”ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்”  எமோஷனலான GV, சைந்தவிVenkatesh Bhat : SUN TV vs VIJAY TV வெங்கடேஷ் பட் பதிலடி போட்டியில் முந்துவது யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Cow Theft:
"பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Fact Check: மோடிக்கு எதிரான பேச்சு - பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன?
Fact Check: மோடிக்கு எதிரான பேச்சு - பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன?
Embed widget