மேலும் அறிய

பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு - விருத்தாசலம் அருகே சோகம்

சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது என்று எச்சரிக்கை பலகை வைக்காததே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் - மக்கள் குற்றச்சாட்டு

நிழற்குடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழந்தார். நெடுஞ்சாலை துறையின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது அக்கிராமத்தில் பேருந்து நிழல் கூட அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தற்போது மழை நிரம்பி உள்ள நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் வினோத் குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விஜய மாநகரம் கிராமத்தில் வசிக்கும் ஜெயமூர்த்தி விஜயகுமாரி இவர்களுக்கு திருமணமாகி பதிமூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் இவர்களுக்கு ஒரே மகனான வினோத்குமார், 12 வயதான மகன் அதே கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
 
இந்த நிலையில், விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில் விஜயமாநகரம் கிராமத்தில் பயணிகள் நிழல் கூட அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது நீண்ட நாள் ஆகியும் நிழல் கூடம் அமைக்கப்படாததால் தற்போது பெய்த கனமழையால் தொண்டப்பட்ட குழிகள் மழை நீரால் மூடப்பட்ட நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் வினோத்குமார் எதிர்பாராத விதமாக அக்குழியில் விழுந்துள்ளார். 
 
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை தூக்கினர். இதில் அவர் மூச்சுத் திணறி அதே இடத்தில் உயிரிழந்த நிலையில், அங்கு சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது என்று எச்சரிக்கை பலகை வைக்காததே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என்று சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை ஆன விஜயமாநகரம் கிராமத்தில் சிறுவனின் உடலை சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
சாலை மறியல் நடைபெறும் தகவல் அறிந்து வந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர் விருத்தாசலம் கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் மற்றும் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் தனபதி நீண்ட நேர பேச்சு வார்த்தையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
 
பின்னர் சிறுவனின் உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக ஆம்புலன்ஸ் அமரர் உறுதி மூலம் கொண்டு செல்லப்பட்டது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget