மேலும் அறிய
Covid : நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - காரைக்காலில் முகக் கவசம் கட்டாயம்
காரைக்காலில் கொரோனா தொற்றால் ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து, பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

காரைக்காலில் முகக்கவசம் கட்டாயம்
காரைக்காலில் ஓராண்டுக்கு பின் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்தார். காரைக்காலைச் சேர்ந்த 35 வயது பெண் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். திரையரங்கு, வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















