மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ 2000 வழங்கும் திட்டம் துவக்கம்

மாவட்டத்தில் உள்ள 728 நியாயவிலைக் கடைகள் மூலம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 523 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு கடையில் 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து இந்நிதி வழங்கப்படுகிறது

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ 2000 வழங்கும் திட்டத்தை பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் 

தமிழகத்தில்  கொரோனா தாக்கம்  அதிகரித்து வருகிறது இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் அதில் முதன்மையான திட்டமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு நிவாரண உதவித் தொகை 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அதில் முதல் தவணையாக 2000 இந்த மாதம் 15ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்று நியாயவிலைக் கடைகள் மூலமாக கொரோனா நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது  இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ 2000 வழங்கும் திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரில் உள்ள நியாய விலை கடையில் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை இணை பதிவாளர், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றியக் குழுத்தலைவர் தேவா,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பூண்டி கலைவாணன் கூறியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழக அரசின் சிறப்பு நிவாரண நிதி ரூ 2000 வழங்கும் திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 728 நியாயவிலைக் கடைகள் மூலம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 523 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு கடையில் 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து இந்நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதிக்காக முதல் தவணையாக ரூ 75.30 கோடி கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் பேசுகையில் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள தீவிர நடவடிக்கையின் காரணமாக விரைவில் கொரோனா நோய் குறைவதோடு முடிவுக்கு கொண்டுவரப்படும். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் தேவைக்கேற்ற ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் துவாக்குடியில் இருந்து ஆக்சிஜன் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. மக்களை நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை முழுவதுமாக கடைபிடித்து தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, பிறருக்கு பரவாமலும் உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பூண்டி.கலைவாணன் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை
காவிரி - கோதாவரி நதி இணைப்பு: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை நடத்த அன்புமணி கோரிக்கை!
காவிரி - கோதாவரி நதி இணைப்பு: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை நடத்த அன்புமணி கோரிக்கை!
எந்த மருத்துவமனையிலும் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை: புதுச்சேரி அரசின் ‘மெகா’ திட்டம்...
எந்த மருத்துவமனையிலும் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை: புதுச்சேரி அரசின் ‘மெகா’ திட்டம்...

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
நியாயமா சிஎம் சார்? ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
நியாயமா சிஎம் சார்? ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
Strait of Hormuz: “எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
“எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
Upcoming Honda Cars: ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் தரும் BGauss இ ஸ்கூட்டர்கள்! விலை, சிறப்புகள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் தரும் BGauss இ ஸ்கூட்டர்கள்! விலை, சிறப்புகள் என்னென்ன?
Kim Jong Un: தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
Embed widget