மேலும் அறிய

பிரபலப் பள்ளி மீது மதமாற்றப் புகார்: தலைமைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

தலைமைச் செயலாளர் இறையன்பு ஆன்லைனில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபலத் தனியார் பள்ளி மீது மதமாற்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்காததாகக் கூறி, வரும் 20-ம் தேதி தலைமைச் செயலாளர் இறையன்பு ஆன்லைனில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று ராயப்பேட்டை. இந்த பகுதியில் சி.எஸ்.ஐ. மோனஹன் மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காகவே விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பள்ளியில் மதமாற்றம் நடைபெறுவதாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் தலைமைச் செயலாளருக்கும், தமிழக டி.ஜி.பி.க்கும் கடிதம் எழுதி இருந்தது.

இதுதொடர்பாகத் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. மோனஹன் மகளிர் பள்ளியில் கடந்த 6-ம் தேதி சிறப்புக் குழு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை விடுதிக்கு அழைத்து வந்து, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது தெரிய வந்துள்ளது என்றும், அந்தப் பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதாகவும், அவர்களை உடனே மீட்க வேண்டும் என்றும் அந்த குற்றச்சாட்டில் கூறியுள்ளனர்.

அந்த சிறுமிகளுக்கு விடுதி வார்டனால் தொல்லை அளிக்கப்பட்டு வருகிறது என்பதால், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை 24 மணி நேரத்தில் மீட்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டது. இதனால், அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

பிரபலப் பள்ளி மீது மதமாற்றப் புகார்: தலைமைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

சென்னையில் பிரபலமான பள்ளி விடுதியில் உள்ள மாணவிகளை 24 மணி நேரத்தில் மீட்க வேண்டும் என்று டி.ஜி.பி.,க்கும், தலைமைச் செயலாளருக்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையமே கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும் சம்மந்தப்பட்ட ராயப்பேட்டை CSI மோனஹன் பள்ளியில் மதமாற்ற முயற்சி ஏதும் கண்டறியப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்தது.

85 பக்கம் கொண்ட அறிக்கை ஆளுநரிடம் நேரில் சமர்ப்பிப்பு

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெய்குமார் ஆகிய இருவரும் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தனர். அப்போது, சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத இல்லம் சம்பந்தப்பட்ட 85 பக்கம் கொண்ட அறிக்கையினை நேரில் வழங்கினர்.


பிரபலப் பள்ளி மீது மதமாற்றப் புகார்: தலைமைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

ஆளுநருக்கும், அரசுக்கும் இடையில் கருத்து மோதல் நிலவும் சூழலில், மாநில அரசின் கருத்துக்கு எதிராக, ஆளுநரிடமே குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக அறிக்கையைச் சமர்ப்பித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனியார் பள்ளி மீதான மதமாற்ற குற்றச்சாட்டு குறித்து எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்காததாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கூறியுள்ளது. இதுகுறித்து வரும் 20-ம் தேதி தலைமைச் செயலாளர் இறையன்பு ஆன்லைனில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
Sabarimala Aravana Payasam : பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
Embed widget