![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Smart City scam : ஸ்மார்ட்டாக நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல்... அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து அறிக்கை தாக்கல் செய்த டேவிதர்!
ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக 200 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை முதலமைச்சரிடம் ஆணைய தலைவர் டேவிதர் தாக்கல் செய்துள்ளார்.
![Smart City scam : ஸ்மார்ட்டாக நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல்... அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து அறிக்கை தாக்கல் செய்த டேவிதர்! Commission Chairman Davidar submit report to Chief Minister mk stalin regarding Smart City scam Smart City scam : ஸ்மார்ட்டாக நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல்... அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து அறிக்கை தாக்கல் செய்த டேவிதர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/20/9cf98a77da52f9ea5626b0e823e4c09e1660988316473175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக 200 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை முதலமைச்சரிடம் ஆணைய தலைவர் டேவிதர் தாக்கல் செய்துள்ளார். இதில் முக்கியமாக டெண்டர் முறைகேடு குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதர் தலைமையில் கடந்த மே மாதம் குழு அமைக்கப்பட்டு, இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
View this post on Instagram
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரிடம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதர் தாக்கல் செய்துள்ளார். அதில், “25.06.2015இல் தொடங்கிய ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடு நடந்ததாகவும், தேர்வு செய்யப்பட்ட நகரம் ஒன்றிற்கு ரூ 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் ஊழல் கண்டறியப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை, திருப்பூர், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், தஞ்சை, கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி ஆகிய 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொட்டித் தீர்த்த மழையால் தியாகராய நகர் ஸ்தம்பித்தது. சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்றது. அதை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதை விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் தமிழக முழுவதும் நேரடியாக சென்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்தார்கள் உள்ளிட்டோர்களுடன் ஆய்வு செய்தது. இதன் அறிக்கையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து தாக்கல் செய்துள்ளது. இதில் தமிழக முழுவதும் நடைபெற்று வரும் பணிகளில் தொய்வு, முறைகேடு, யாருக்கெல்லாம் தொடர்பு, எங்கெல்லாம் இணைப்பு பணிகள் முழுமையாக முடியவில்லை என்பது குறித்து முதலமைச்சருடன் விரிவாக எடுத்துரைத்தார். 200 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் முக்கியமாக டெண்டர் முறைகேடு குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)