மேலும் அறிய

பூப்பெய்திய மாணவிக்கு பள்ளியில் நடந்த கொடுமை.. போலீஸ் விசாரணை.. நடவடிக்கை பாயுமா.?

Coimbatore School Issue: கோவையில், தனியார் பள்ளி ஒன்றில்,பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கோவையில், சமீபத்தில் பூப்பெய்திய 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை, தனியார் பள்ளி ஒன்று, முழு ஆண்டுத் தேர்வை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து கேட்டதற்கு அலட்சியமாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பள்ளியின் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனியார் பள்ளியில் மாதவிலக்கால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

கோவை கிணத்துக்கடவில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 5-ம் தேதி பூப்பெய்தியுள்ளார். தற்போது முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், 7-ம் தேதி அந்த மாணவி தேர்வெழுத வந்துள்ளார். ஆனால், மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி, அந்த மாணவியை வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்துள்ளது அந்த தனியார் பள்ளி நிர்வாகம்.

மாணவிக்கு நேர்ந்த இந்த கொடுமையை கேள்விப்பட்ட அவரது தாய், நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் அது குறித்து கேட்டுள்ளார். ஆனால், அந்த பள்ளி நிர்வாகமோ, எங்கள் பள்ளியில் இப்படித்தான் நடக்கும், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேறு பள்ளியில் மாணவியை சேர்த்துக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளித்துள்ளது.

பள்ளியின் மீது புகார் அளித்த மாணவியின் பெற்றோர்

இதைத் தொடர்ந்து, பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக, அந்த தனியார் பள்ளியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளிக்கு நேரில் சென்று, பள்ளியின் முதல்வர் ஆனந்தி மற்றும் பள்ளி கண்காணிப்பாளரிடம் சிவகாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தவறு உறுதியானால் நடவடிக்கை - அமைச்சர், முதன்மை கல்வி அலுவலர்

இதனிடையே, இச்சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பள்ளியில் போலீசார் விசாரித்து வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதேபோல், பள்ளி மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணையின் முடிவில் தவறு உறுதியானால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், மாணவி வெளியே அமர்ந்து தேர்வெழுதிய வீடியோ வெளியாகி கடும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், இதை பார்த்த பொதுமக்கள், தற்போதுள்ள நவீன காலத்திலும், இப்படிப்பட்ட அவல நிலையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget