மேலும் அறிய

பூப்பெய்திய மாணவிக்கு பள்ளியில் நடந்த கொடுமை.. போலீஸ் விசாரணை.. நடவடிக்கை பாயுமா.?

Coimbatore School Issue: கோவையில், தனியார் பள்ளி ஒன்றில்,பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கோவையில், சமீபத்தில் பூப்பெய்திய 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை, தனியார் பள்ளி ஒன்று, முழு ஆண்டுத் தேர்வை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து கேட்டதற்கு அலட்சியமாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பள்ளியின் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனியார் பள்ளியில் மாதவிலக்கால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

கோவை கிணத்துக்கடவில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 5-ம் தேதி பூப்பெய்தியுள்ளார். தற்போது முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், 7-ம் தேதி அந்த மாணவி தேர்வெழுத வந்துள்ளார். ஆனால், மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி, அந்த மாணவியை வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்துள்ளது அந்த தனியார் பள்ளி நிர்வாகம்.

மாணவிக்கு நேர்ந்த இந்த கொடுமையை கேள்விப்பட்ட அவரது தாய், நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் அது குறித்து கேட்டுள்ளார். ஆனால், அந்த பள்ளி நிர்வாகமோ, எங்கள் பள்ளியில் இப்படித்தான் நடக்கும், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேறு பள்ளியில் மாணவியை சேர்த்துக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளித்துள்ளது.

பள்ளியின் மீது புகார் அளித்த மாணவியின் பெற்றோர்

இதைத் தொடர்ந்து, பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக, அந்த தனியார் பள்ளியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளிக்கு நேரில் சென்று, பள்ளியின் முதல்வர் ஆனந்தி மற்றும் பள்ளி கண்காணிப்பாளரிடம் சிவகாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தவறு உறுதியானால் நடவடிக்கை - அமைச்சர், முதன்மை கல்வி அலுவலர்

இதனிடையே, இச்சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பள்ளியில் போலீசார் விசாரித்து வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதேபோல், பள்ளி மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணையின் முடிவில் தவறு உறுதியானால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், மாணவி வெளியே அமர்ந்து தேர்வெழுதிய வீடியோ வெளியாகி கடும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், இதை பார்த்த பொதுமக்கள், தற்போதுள்ள நவீன காலத்திலும், இப்படிப்பட்ட அவல நிலையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
" மரமண்டையா இருக்கியேனு திட்டுவது எவ்ளோ பெரிய தப்பு " விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர் உருக்கம்
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget