மேலும் அறிய

கோவையில் கொடூரம்.. வடகிழக்கு மாநில மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்கள்.. நடந்தது என்ன?

கோவையில் பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வரும் வடகிழக்கு மாணவிகள், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் தங்களுக்கு சிலர் தொல்லை கொடுத்து வருவதாகவும் மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.

கோவையில் தங்கியுள்ள வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவிகளை குறிவைத்து நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வரும் வடகிழக்கு மாணவிகள், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் தங்களுக்கு சிலர் தொல்லை கொடுத்து வருவதாகவும் மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.

வடகிழக்கு மாநில மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்கள்:

மணிப்பூர், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் சிலர், கோயம்புத்தூருக்கு வந்து படித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும், ராமலிங்கம் காலனி, பாரதி பூங்கா சாலை - 2, அழகேசன் சாலை, ரமணா கவுண்டர் லேஅவுட் ஆகிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் வசித்து படித்து வருகின்றனர்.

இவர்களை குறிவைத்து, மர்ம நபர்கள் சிலர் பாலியல் ரீதியாக தொல்லை தந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மணிப்பூரை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறுகையில், "ஐந்து மாதங்களுக்கு முன்பு, மதியம் 2 மணியளவில், பல்கலைக்கழகத்திலிருந்து ராமலிங்கம் காலனியில் உள்ள எனது அறைக்கு நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, ​​ஒரு மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், என்னை பார்த்த உடன் திடீரென தன்னுடைய ஆடைகளை கழற்றிவிட்டார்" என்றார்.

கோவையில் கொடூரம்:

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், இதுகுறித்து பேசுகையில், "காரில் வந்த ஒருவர் பின்தொடர்ந்து வந்து, ஆரம்ப சுகாதார மையம் அருகே என்னை தடுத்து நிறுத்தினார். கார் கண்ணாடியை திறந்து விட்டு, தனது அந்தரங்க உறுப்புகளை காட்டினார்" என்றார்.

இதுகுறித்து மற்றொரு மாணவி ஒருவர் கூறுகையில், "கடந்த வருடம், பாரதி பார்க் சாலை-2 இல் உள்ள ஒரு உணவகத்திற்கு இரண்டு மாணவிகள் சென்றிருக்கின்றனர். பைக்கில் வந்த இரண்டு ஆண்கள், அவர்களுக்கு முன்னால் பைக்கை நிறுத்திவிட்டு, மாணவி ஒருவரை தகாத இடத்தில் தொட்டுள்ளார். அவர் கூச்சலிட்டபோது, ​​அவர்கள் ஓடிவிட்டனர். ஆனால், அருகில் இருந்தவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை" என்றார்.

மாணவிகளுக்கு அட்வைஸ் செய்த HOD:

இந்த அனைத்தும் சம்பவங்களும் சாய்பாபா காலனி காவல் நிலையத்திலிருந்து 1 கி.மீ சுற்றளவில் நடந்திருக்கின்றன. குறிப்பிட்ட இந்தப் பகுதியில் காவல்துறை வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும், மாணவிகள் அதே பிரச்னைகளை இன்னும் எதிர்கொண்டு வருகின்றனர்.

ஏனெனில், வடகிழக்கு மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்களுக்கு போலீஸ் எங்கெல்லாம் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரிந்திருக்கிறது. புகார் அளித்த பிறகும், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவிகள் கூறுகிறார்கள். இந்தப் பிரச்னை குறித்து பல்கலைக்கழகத்தில் புகார் தெரிவித்துபோது, ​​மாணவிகளை சரியாக உடை அணியுமாறு துறைத்தலைவர்கள் (HoDs) அறிவுறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் காஞ்சிபுரம் ஆய்வு: செயின்ட்-கோபைன், ரெனால்ட் டஸ்டர் ஓட்டி அசத்தல்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் காஞ்சிபுரம் ஆய்வு: செயின்ட்-கோபைன், ரெனால்ட் டஸ்டர் ஓட்டி அசத்தல்!
Udhayanidhi Stalin: பெண்கள் பற்றி வக்கிர சிந்தனை.. நள்ளிரவில் உதயநிதியை விளாசிய அமைச்சர்கள்!
Udhayanidhi Stalin: பெண்கள் பற்றி வக்கிர சிந்தனை.. நள்ளிரவில் உதயநிதியை விளாசிய அமைச்சர்கள்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget