"நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்.." - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆட்சிக்கு மீண்டும் வரப்போவதில்லை என்று முந்தைய அ.தி.மு.க. அரசு கொரோனா தடுப்பு பணியில் அலட்சியமாக இருந்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசினார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த வரவு – செலவு தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் மாதம் தொடங்கி மே 2ந் தேதி வரை தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பிற்கு அ.தி.மு.க. அரசே காரணம். பிப்ரவரி 26 முதல் மே 6-ந் தேதி வரை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அ.தி.மு.க. அரசு மறந்துவிட்டதா? கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமியின் கையை யாரும் கட்டவில்லை. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்து அ.தி.மு.க. அரசு அலட்சியமாக இருந்துவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்தின் தலைப்பை சுட்டிக்காட்டி முன்னாள் அ.தி.மு.க. அரசை விமர்சித்தும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.





















