மேலும் அறிய

Children Films: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடல்: விதிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்கல்வி இயக்குநர் இந்தக் கல்வியாண்டில்‌ சிறார்‌ திரைப்படங்கள்‌ திரையிடுதலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் சார்ந்து சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மாதத்தின்‌ ஒவ்வொரு இரண்டாவது வாரமும்‌ அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ சிறார்‌ திரைப்படங்கள்‌ திரையிடப்பட்டு வருகின்றன. திரைப்படங்கள்‌ மாணவர்களுடைய சிந்தனை மற்றும்‌ செயல்பாடுகளில்‌ ஏற்படுத்தும்‌ தாக்கம்‌ அளப்பரியது. இக்காட்சி ஊடகத்தின்‌ வாயிலாக மாணவர்களின்‌ முன்னேற்றம்‌, புதிய பார்வை மற்றும்‌ வாழ்வியல்‌ நற்பண்புகளை மேம்படுத்துவதே இம்முயற்சியின்‌ முக்கிய நோக்கமாகும்‌.

பள்ளிகளில்‌ சிறார்‌ திரைப்படங்கள்‌ திரையிடுவது சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள்‌, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 9-ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு, சிறார்‌ திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில்‌ திரையிட வேண்டும்‌.

அதிக எண்ணிக்கையில்‌ மாணவர்கள்‌ இருப்பின்‌ குழுக்களாகப்‌ பிரித்துத்‌ திரையிட வேண்டும்‌.

ஒவ்வொரு பள்ளியிலும்‌ அச்செயல்பாடுகளுக்கென ஒரு ஆசிரியருக்குப்‌ பொறுப்பளிக்க வேண்டும்‌. இவ்வாசிரியர்களுக்கு தொழில்‌நுட்ப மேலாண்மை, திட்டமிடுதல்‌ மற்றும்‌ மாணவர்களை ஒருங்கிணைத்தல்‌ சார்ந்த சிறப்புப்‌ பயிற்சி வழங்கப்படும்‌. இவ்வாசிரியர்‌ மூலம்‌ பள்‌ளியிலுள்ள 6 முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை பயிற்றுவிக்கும்‌ பிற ஆசிரியர்களுக்கும்‌ இப்பயிற்சி வழங்கப்பட்டு சுழற்சி முறையில்‌ பிற ஆசிரியர்களையும்‌ இந்நிகழ்வுகளில்‌ ஈடுபடுத்துதல்‌ வேண்டும்‌.

திரைப்படக்காட்டி / தொலைக்காட்சிப்பெட்டி /ஒலிபெருக்கி இல்லாத பள்ளிகளில்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்கள்‌ வாயிலாக வாடகைக்குப்‌ பெற்றுத்‌ திரையிடவேண்டும்‌.

திரைப்படம்‌ திரையிடப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஆசிரியர்‌ மாணவர்களிடம்‌ திரைப்படம்‌ குறித்து சிறு உரையாடல்‌ நிகழ்த்தி, மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்‌.

திரைப்படம்‌ முடிந்தபிறகு, காட்‌ சிப்படுத்தப்பட்ட திரைப்படத்தின்‌ மையக்கருத்து அல்லது தாக்கம்‌ சார்ந்து ஒரு உரையாடலை மாணவர்களிடையே நிகழ்த்த வேண்டும்‌. மேலும்‌, மாணவர்களின்‌ கருத்துகளை இணைப்பில்‌ வழங்கப்பட்டுள்ள பின்னூட்டக்‌ கேள்வித்தாள்‌ வாயிலாகப்‌ பெறுதல்‌ வேண்டும்‌.
 
ஏதேனும்‌ 5 மாணவர்களை (வழக்கமாக வகுப்பில்‌ பேசாத மாணவர்களை முன்னிலைப்படுத்துதல்‌ நலம்‌) ஆசிரியர்‌ கண்டறிந்து அனைத்து மாணவர்கள்‌ முன்னிலையிலும்‌ 2-3 நிமிடங்கள்‌ திரைப்படம்‌ குறித்து பேசச்‌ செய்ய வேண்டும்‌. பின்னர்‌, அனைத்து மாணவர்களையும்‌ திரைப்படம்‌ குறித்து தங்கள்‌ கருத்துக்களை அவர்கள்‌ சொந்த நடையில்‌ எழுதித்‌ தரச்‌ சொல்ல வேண்டும்‌.


Children Films: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடல்: விதிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை

மாணவனின்‌ கருத்துகள்‌, படம்‌ குறித்த விமர்சனமாகவோ, பாத்திரம்‌ குறித்த திறனாய்வாகவோ, படக்கதைச்‌ சுருக்கமாகவோ, படத்தில்‌தான்‌ உணர்ந்தவற்றை விவரிப்பதாகவோ இருக்கலாம்‌. அனைத்து மாணவர்களின்‌ படைப்புகளையும்‌ ஆவணப்படுத்த வேண்டும்‌. சிறந்த படைப்புகளைப் பள்ளிக் கல்வித்துறையால்‌ வெளியிடப்படும்‌ சிறார்‌ இதழில்‌ இடம்பெறச்‌ செய்ய அனுப்பி வைக்க வேண்டும்‌.

ஒவ்வொரு மாதமும்‌ திரையிடப்பட வேண்டிய திரைப்படத்திற்கான இணைப்பு பள்ளிகளுக்கு அனுப்பப்படும்‌.

பள்ளி அளவில்‌ ஒவ்வொரு மாதமும்‌ சிறந்து விளங்கும்‌ மாணவர்களை ஒன்றிய அளவிலும்‌ ஒன்றிய அளவில்‌ தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை மாவட்ட அளவிலும்‌ பங்கேற்க வாய்ப்பளித்தல்‌ வேண்டும்‌. ஒருமுறை பள்ளியளவில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன்‌/மாணவியை அடுத்த மாதம்‌ தேர்ந்தெடுத்தல்‌ கட்டாயமாகத்‌ தவிர்க்கப்பட வேண்டும்‌.

ஒவ்வொரு மாதமும்‌ இவ்வாறு மாவட்ட அளவில்‌ தெரிவு பெறும்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ ஆண்டுக்கொருமுறை மாநில அளவில்‌ நடைபெறும்‌ சிறார்‌ திரைப்படத்‌ திருவிழாவில்‌ பங்கேற்பர்‌. அந்நிகழ்வில்‌ கலைத்துறையைச்‌ சார்ந்த வல்லுநர்களோடு கலந்துரையாடுவர்‌.

மாநில அளவில்‌ பங்கேற்கும்‌ மாணவர்களில்‌ சிறந்து விளங்கும்‌ 15 மாணவர்கள்‌ தெரிவு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கல்விச்‌ சுற்றுலா அழைத்துச்‌ செல்லப்படுவார்கள்‌.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும்‌ தவறாது பின்பற்றி இந்நிகழ்வினை பள்ளிகளில்‌ சிறப்பாகச்‌ செயல்படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும்‌ மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! தேனி - எருமேலி இடையே புதிய ரயில் பாதை: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
சபரிமலை பக்தர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! தேனி - எருமேலி இடையே புதிய ரயில் பாதை: அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்? - சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்? - சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கை இதோ
Vegavathi Encroachments Relocation: தூக்கமிழந்த 1,400 குடும்பங்கள்! காஞ்சிபுரம் மக்களுக்கு நற்செய்தி! வேகவதி ஆற்றுக்கு வரப்போகும் மிகப்பெரிய விடிவு!
தூக்கமிழந்த 1,400 குடும்பங்கள்! காஞ்சிபுரம் மக்களுக்கு நற்செய்தி! வரப்போகும் மிகப்பெரிய விடிவு!
வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்த்த முன்னோர்… இயற்கையை மட்டுமல்ல, உடல்நலத்தையும் காத்த அறிவியல் ரகசியம்!
வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்த்த முன்னோர்… இயற்கையை மட்டுமல்ல, உடல்நலத்தையும் காத்த அறிவியல் ரகசியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Embed widget