மேலும் அறிய

கரூரில் பள்ளி வாகனம் மோதி தந்தையின் கண் முன்பே குழந்தை உயிரிழப்பு

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு வாசல் கதவை நீக்கி சரவணன் வெளியே வந்துள்ளார்.  

கரூரில் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


கரூரில் பள்ளி வாகனம் மோதி தந்தையின் கண் முன்பே குழந்தை உயிரிழப்பு

 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் - மோகனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். நேற்று மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு வாசல் கதவை நீக்கி சரவணன் வெளியே வந்துள்ளார்.  

 


கரூரில் பள்ளி வாகனம் மோதி தந்தையின் கண் முன்பே குழந்தை உயிரிழப்பு

 

அப்போது இரண்டாவது மகன் சாய் மிதுன் என்ற ஒன்றரை வயது  குழந்தை வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பள்ளி வாகனத்தின் முன்பு குறுக்கே ஓடியபோது தந்தையின் கண் முன்பே குழந்தையின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனியார் பள்ளியின் வேன் மற்றும் ஓட்டுநரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். 

 


கரூரில் பள்ளி வாகனம் மோதி தந்தையின் கண் முன்பே குழந்தை உயிரிழப்பு

 

வீட்டு வாசலிலேயே பள்ளி வாகனத்தில் மோதி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கா. பரமத்தி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி.

கா. பரமத்தி அருகே முன்னாள் சென்ற லாரி மீது பைக் மோதி விபத்தில் ஒருவர் சாவு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலி முத்து மகன் அருண்குமார். லாரி ஓட்டுனரான இவர் திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை இயக்கியுள்ளார். புதுக்கனல்லி அருகே சென்ற போது கா. பரமத்தி அடுத்த விஸ்வநாதபுர கிழக்குத் தெருவை சேர்ந்த காளிமுத்து மகன் அரவிந்த் இயக்கி வந்த பைக் முன்னால் சென்ற லாரி மீது பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கா. பரமத்தி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே திருமணமாகாத விரக்தி கூலித் தொழிலாளி தற்கொலை.

கிருஷ்ணராயபுரம் அருகே திருமணமாகாத விரக்தியில் கூலி தொழிலாளி பூச்சி மருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு திருக்காம்புலியூரை  சேர்ந்த மணிவேல் மகன் செந்தில்குமார் கூலி தொழிலாளி இவர் திருமணம் ஆகாத விரக்தியில் தலை வீட்டில் விவசாய பயன்பாட்டிற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து கொடுத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை விட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு இரவு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தால் இது குறித்து அவரது தம்பி துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Thug Life: என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கமலின் தக்ஃலைப்பை கும்பலோடு கும்பலாக தாக்கிய பாஜக!
Thug Life: என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கமலின் தக்ஃலைப்பை கும்பலோடு கும்பலாக தாக்கிய பாஜக!
சாய் சுதர்சனின் ஆட்டத்திறமைக்கு காரணம் என்ன?..நிபுனர்கள் சொல்வது இதுதான்
சாய் சுதர்சனின் ஆட்டத்திறமைக்கு காரணம் என்ன?..நிபுனர்கள் சொல்வது இதுதான்
Putin Vs Ukraine: “பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் - ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!
“பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் - ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!
Embed widget