மேலும் அறிய

CM Stalin PM Modi: தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதி கிடைக்குமா? இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

CM Sstalin PM Modi: வெள்ள பாதிப்பிற்கான நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழகத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

CM Sstalin PM Modi: பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான நிதியை கேட்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி விரைந்துள்ளார்.

பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்:

இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக உரிய நிதியை வழங்குமாறு வலியுறுத்த உள்ளார். மேலும், தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் இடைக்கால நிவாரண நிதி வழங்கவும் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பிரதமரும், முதலமைச்சர் ஸ்டாலினும் சந்திப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு:

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ம் தேதி கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, ஏராளமான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். தீவிர மிட்பு பணிகளுக்கு பிறகு நான்கு மாவட்டங்களிலும் தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் 6000 ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நான்கு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வேண்டும் என்று மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். மத்திய அரசு சார்பிலும் இடைக்கால நிதியாக 450 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மத்தியக் குழு ஆய்வு:

இதனிடையே, தமிழகம் வந்த மத்தியக் குழுவும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு டெல்லி சென்றிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழு பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்மாவட்டங்களில் பெருமழை:

இந்த சூழலில் தான் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி வருகிறது. காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையை காட்டிலும் அதிகப்படியான மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நீர்நிலைகள் மூழ்கி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததோடு, ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் பிரதமர் மோடியை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Russia Backs India: நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
Nadda Vs Karge: “அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
“அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
PB Balaji JLR CEO: ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO நியமனம்; யார் இந்த தமிழர் P.B. பாலாஜி.?
ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO நியமனம்; யார் இந்த தமிழர் P.B. பாலாஜி.?
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
Embed widget