மேலும் அறிய

CM Stalin: 4.0 மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

"நாளையை நோக்கி இன்றே-தலை நிமிர்ந்த தமிழ்நாடு" என்ற என்ற தலைப்பில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு இன்று சென்னை தரமணியில் நடைபெற்றது.  இந்த மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

"நாளையை நோக்கி இன்றே-தலை நிமிர்ந்த தமிழ்நாடு" என்ற என்ற தலைப்பில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு இன்று சென்னை தரமணியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "2030ம் ஆண்டுக்குள் தொழில்துறையில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நாம் அடைய வேண்டும் என்பதே இலக்கு" என்றார்.

நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி மாநாட்டிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் எனது அன்பான நன்றி. கடந்த 15 மாத ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எனக்கு முன்பு பேசியவர்கள் கூறினர்.

குறிப்பாக தொழில்துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் தமிழ்நாடு தொழில்துறையில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறது என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு காரணமாக திகழும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் ஐஏஎஸ், தொழில்துறை அதிகாரிகள் ஆகியோரை இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். தொழில்துறை சார்பில் கடந்த 15 மாத ஆட்சிக் காலத்தில் எத்தனையோ மாநாடுகளை நாம் நடத்தி இருக்கிறோம். முதலீடுகளை ஈர்ப்பதற்காக, திட்டங்களை வகுப்பதற்காக, தொழில் கொள்கைகளை வெளியிடுவதற்காக, ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக இப்படி ஏராளமான மாநாடுகளை நமது அரசு நடத்தியுள்ளது.


CM Stalin: 4.0 மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

அவை அனைத்தும் தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலன்களை அளித்துள்ளது. அந்த வரிசையில் இந்த மாநாடும் அமையும்.  மேம்பட்ட உற்பத்திக்கான இரண்டு திறன்மிகு மையங்களை திறந்து வைத்தல், மதுரை மற்றும் சென்னையில் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி மையங்களை தொடங்கி வைத்தல், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல் ஆகியவை இந்த மாநாட்டில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டு தொழில்துறைக்கு நாம் வைத்துள்ள இலக்கு மிகப் பெரியது. 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதே இலக்கு. 

திறன்மிக்கவர்கள் நமது மாநிலத்தில் மிக அதிகம். இதன்காரணமாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் நமது மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வருகின்றன.  பொதுவாக உற்பத்தியை அந்தத் துறையை விட சேவைத் துறையில் கவனம் செலுத்தினால் தான் பெரிய அளவில் வளர்ச்சியை அடைய முடியும் என்று சிலர் கருதுகிறார்கள். 

ஆனால், நம்மை பொருத்தவரை உற்பத்தி மற்றும் சேவைத் துறை ஆகிய இரண்டுமே முன்னிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியை அடைய முடியும் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முன்னதாக, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையம், தமிழ்நாடு ஸ்மார்ட் மறறும் மேம்பட்ட உற்பத்தி மையம், மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை, 2022 கையேடு வெளியிடப்பட்டது. கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த விழாவில் பங்கேற்றார். அரசு உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய 2 விசைப்படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், பாக்ஜல சந்திப்பில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்வதாகவும், இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்ய தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் உதவிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget