மேலும் அறிய

CM Stalin: ”இது வேண்டுகோள் இல்ல! கட்டளை செஞ்சுதான் ஆகனும்” வைரமுத்துவுக்கு ஆர்டர் போட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

”கலைஞர் மட்டும் இன்று இருந்திருந்தால் 'மகா கவிதை' நூலை தீட்டிய வைரமுத்துவை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார்".

சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டர்.  இந்நிகழ்வில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றார்.

முதலமைச்சரின் கட்டளை:

இந்த நிகழ்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வைரமுத்துவின் 15 நூல்களை வெளியிட்ட கைகள் கலைஞரின் கைகள். இது அவர்கள் இருவருக்கும் இருந்த நட்புக்கு பெருமை. நான் கவிஞனும் அல்ல. கவிதை விமர்சகனும் அல்ல. கவிஞராகவும், கலை விமர்சகராகவும் இருந்து கோலோச்சிய கலைஞர் மட்டும் இன்று இருந்திருந்தால் 'மகா கவிதை' நூலை தீட்டிய கவிப்பேரரசு வைரமுத்துவை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார்.

வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு பட்டமே கலைஞர் வழங்கியது தான். கலைஞரின் வரலாற்றை கவிதையாக எழுதிக் தாருங்கள் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.   வைரமுத்துவுக்கு ஒரு ரசிகனாக என்னுடைய வேண்டுகோள் இது. இன்னும் சொல்லப்போனால் கட்டளை” என்றார். 

"வைரமுத்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்”

தொடர்ந்து பேசிய அவர், ”கவிப்பேரரசு வைரமுத்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அவற்றை வெளியிடும் வாய்ப்பை நான் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.  படைப்பு, புத்தகத்தை தரமாக தயாரிப்பதில் வைரமுத்து கண்ணும் கருத்துமாக இருப்பார்.  அந்த வகையில், படைப்பு உலகத்துக்கு மட்டுமல்ல, பதிப்பு உலகத்துக்கும் 'மகா கவிதை' நூல் மகுடமாக அமைந்துள்ளது.

ஐம்பூதங்களும் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதையில் அடங்கிக் கிடக்கின்றன. மண், நீர், காற்று, வானம் மாசு அடைந்துள்ளதால் சுற்றுச்சூழல் மாறியுள்ளது.  'மண்ணியல், விண்ணியல் மாற்றத்தை பொருட்படுத்தாவிடில் ஐப்பூதங்களும் எதிராய் மாறிவிடும்’ என்கிறார் கவிஞர்.  அதிக மழைக்கான உண்மையான காரணங்களை வைரமுத்து தனது நூலில் கூறியுள்ளார்" என்றார் முதல்வர் ஸ்டாலின். 

"எவ்வளவு மழை பெய்யும் என்பதை தெரிவிக்கவில்லை”

மேலும், "மிக முக்கியமான காலகட்டத்தில் ’மகா கவிதை’ நூலை எழுதியுள்ள கவிப்பேரரசு வைரமுத்துவை பாராட்டியாக வேண்டும். 100ஆண்டுகள் இல்லாத மழை பெய்தது என்கிறார்கள். ஆனால், அவ்வளவு மழை பெய்ததற்கான காரணத்தை யாரும் சொல்லவில்லை. சென்னை, தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று தான் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் சொன்னார்கள்.

ஆனால், எவ்வளவு  பெய்யும் என்று சொல்லவில்லை.  ஏரி உடைந்ததைப் போல, வானம் உடைந்து கொட்டியது போல மழை பெய்துள்ளது.  நவீன அறிவியலை சொல்லும் திறன் கொண்டது தமிழ் மொழி என்பதை நிரூபிக்கிறது வைரமுத்துவின் நூல்.  உலகத்துக்கே தேவையானவற்றை பேசுகிறது வைரமுத்துவின் ’மகா கவிதை’ நூல்.  கவிஞர்  வைரமுத்து எழுதிய நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.


மேலும் படிக்க

IPS Reshuffle: ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு! 10 பேருக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு அதிரடி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget