பீகார் குடும்பத்தினர் கொலை.. பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான திடுக் தகவல்!
சென்னை அடையாறில் உள்ள இந்திரா நகர் பகுதியில் உள்ள 1வது அவென்யூவில் கடந்த ஜனவரி 25ம் தேதி அதிகாலை சாக்கு மூட்டையில் இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சென்னை தரமணியில் கொலை செய்யப்பட்ட பீகார் குடும்பத்தினர் வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட முனிதா குமாரி உடலில் அதற்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
சென்னை அடையாறில் உள்ள இந்திரா நகர் பகுதியில் உள்ள 1வது அவென்யூவில் கடந்த ஜனவரி 25ம் தேதி அதிகாலை சாக்கு மூட்டையில் இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றி அடையாறு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்ட நபரின் சட்டையில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தொலைபேசி எண் இருந்தது. அதனைக் கொண்டு விசார்ணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட நபர் பெயர் கௌரவ் குமார் என கண்டறியப்பட்டது.
வேலை தேடி பீகார் மாநிலத்தில் வந்த அவர், மனைவி மற்றும் 2 வௌஅது குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. சிசிடிவி கேமரா மூலம் 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். குழந்தையின் உடல் மத்திய கைலாஸ் ரயில் நிலையம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயிலும், மனைவி முனிதா குமாரி சடலம் பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து 5 நாட்களுக்கு பிறகும் மீட்கப்பட்டது.
மூன்று பேர் உடலையும் தனித்தனி சாக்கு மூட்டையில் கட்டியுள்ளனர். குழந்தை உடலை முதலிலும், மனைவி உடலை இரண்டாவதாகவும் வீசியுள்ளனர். கௌரவ் குமார் உடலை திருவான்மியூர் கடலில் வீச முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்திரா நகர் 1வது அவென்யூ அருகே செல்லும்போது காரில் இருந்து சடலம் அடங்கிய மூட்டை கீழே விழுந்துள்ளது. அதனை எடுக்க முடியாமல் விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதனைத் தொடர்ந்து முனிதா குமாரி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபோது ஏற்பட்ட தகராறில் இந்த 3 கொலைகள் நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்த நிலையில் அதில் தலையில் தாக்கப்பட்டதன் காயம் காரணமாக முனிதா குமாரி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஷ் உள்ளிட்ட 5 பேரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கடுமையாக தமிழக அரசை சாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.























