மேலும் அறிய

Chennai New Commissioner: சென்னையின் புதிய கமிஷனர் யார்..? ரேஸில் உள்ள 3 பேர் யார்? - முழு விவரம்..!

தமிழ்நாட்டின் டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் காவல்துறை தலைவர் எனப்படும் டி.ஜி.பி.யாக பொறுப்பு வகிப்பவர் சைலேந்திரபாபு. இவரது பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக தற்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் நியமிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள அதே நேரத்தில், சென்னை மாநகராட்சியின் புதிய காவல் ஆணையர் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரமான சென்னையின் காவல் ஆணையர் யார்? என்ற கேள்விக்கு பதிலாக மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயர் உள்ளது.

1.டேவிட்சன் ஆசிர்வாதம்:

தமிழ்நாட்டின் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஒருவர் டேவிட்சன் ஆசிர்வாதம். உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்த இவரது பெயரே சென்னையின் புதிய காவல் ஆணையர் பெயர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், தற்போது இவர் ஆணையராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு பெரும் அளவில் பின்னுக்கு சென்றுள்ளது.

ஏனென்றால், மதுரை மாநகர காவல் ஆணையராக பொறுப்பு வகித்தபோது போலி கடவுச்சீட்டு விவகாரத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக உள்ள குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், இவரை உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து காவல் தலைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்தனர். இதனால், இவர் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு ஆகும்.

  1. சந்தீப்ராய் ரத்தோர்:

சென்னை மாநகர காவல் ஆணையர் பதவிக்கான போட்டியில் இரண்டாவதாக இருப்பவர் சந்தீப்ராய் ரத்தோர். தற்போதைய சூழலில், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட சந்தீப்ராய் ரத்தோருக்கே வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வான சந்தீப்ராய் ரத்தோர் ஆவடி நகர முதல் காவல் ஆணையராக இருந்தார். இவர் தற்போது டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளார்.

  1. ஆபாஷ்குமார்:

ஆபாஷ்குமார் ஐ.பி.எஸ். மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஒருவர் ஆவார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை டி.ஜி.பி.யாக தற்போது பொறுப்பு வகிப்பவர் ஆபாஷ்குமார். இவர் விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாகவும், தமிழக ஆளுநரின் பாதுகாப்பிற்கான கூடுதல் ஆணையராகவும், சென்னை போக்குவரத்து துணை ஆணையராகவும், மதுரை காவல் ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.  இவர் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை விசாரணை காரணமாக டேவிட்சன் தேவாசீர்வாதம் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்புகள் குறைவு என்பதால், சந்தீப்ராய் ரத்தோருக்கும், ஆபாஷ்குமாருக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. பெரும்பாலும் சந்தீப்ராய் ரத்தோரே புதிய சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்றே காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
Embed widget