மேலும் அறிய

சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?

குறைந்த பரப்பளவு நிலத்தில் பிரமாண்ட வீடு- 500 சதுர அடியில் 3 BHK கட்டுவது எப்படி ? - சிறப்பு வழிகாட்டி

" நகரங்களில் வீடு வாங்குவது சவால் "

அடுக்குமாடி வீடு வாங்க விருப்பம் இல்லை என்பதால் , எப்படியாவது நிலம் வாங்கி சொந்தமாக தனி வீடு கட்ட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் , சென்னை போன்ற நகரங்களில் நிலம் வாங்குவது என்பதே பெரிய சவாலாக அமைந்துள்ளது.

ஊரக பகுதிகளில் , குறைந்த பட்சம் மூன்று முதல் ஐந்து சென்ட் வரை தான் குறைந்தபட்ச மனை அளவாக உள்ளது. ஆனால் , சென்னை போன்ற நகரங்களில் சென்ட் கணக்கில் மனை வாங்க முடியாது என்பதால் , சதுரடி அடிப்படையில் தான் மனை வாங்க முடியும். அதுவும் நகரின் பிரதான பகுதிகளை விடுத்து வெளியில் , மிக குறைந்த பரப்பளவு நிலம் கிடைத்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

குறிப்பாக , 500 அல்லது , 600 சதுரடி நிலம் கிடைத்தால் கூட போதும் என்ற அடிப்படையில் மக்கள் வீடு கட்ட முடிவு செய்கின்றனர். சொந்தமாக வீடு கட்ட நினைப்பவர்கள் , வீடு அதிக பரப்பளவில் விசாலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் , குறைந்த பரப்பளவு நிலத்தில் என்ன முடியுமோ அதன்படி மட்டுமே வீடு கட்ட முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வீடு கட்ட அனுமதி

வீட்டுக்கான மனை வாங்கும் போது, கட்டடம் கட்ட அனுமதிக்கப்படும் குறைந்த பட்ச பரப்பளவு என்ன என்பதை புரிந்து அதற்கு ஏற்ற பரப்பளவில் மனை வாங்க வேண்டும். இதன்படி , 840 சதுர அடி அதற்கு மேற்பட்ட பரப்பளவில் மனை வாங்கினால், அதில் வீடு கட்ட அனுமதி கிடைக்கும். ஆனால் , குடும்பத்துக்குள் பங்கு பிரித்தல் போன்ற காரணங்களால், 500 அல்லது, 600 சதுரடி பரப்பளவு மனை பெற்றவர்கள் உரிய ஆதாரங்களை கொடுத்தால் அதில் கட்டட அனுமதி கிடைக்கும்.

இவ்வாறு, 500, 600 சதுரடி அளவு மனையில் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வீடு கட்ட முடியுமா என்ற கேள்வி எழும். இது போன்ற குறைந்தபட்ச பரப்பளவு மனைகளில் வீடு கட்ட வேண்டும் என்றால், தரைதளம் மட்டுமல்லாது , முதல் தளத்துக்கும் சேர்த்து வரைபடம் தயாரித்தால் தான் சாதாரணமாக ஒரு குடும்பம் இயல்பான முறையில் வசிக்க முடியும்.

இந்த வகையில் தரைதளத்தில் , வரவேற்பு அறை , சமையலறை , ஒரு படுக்கை அறை மட்டும் அமைக்கலாம். முதல் தளத்தில் ஒரு வரவேற்பு அறை , இரண்டு படுக்கை அறை , ஒவ்வொன்றிலும் அட்டாச்டு பாத்ரூம் போன்ற வசதிகளை ஏற்படுத்தலாம். இதன்படி திட்டமிட்டால், 500 சதுரடி நிலத்தில் மூன்று படுக்கை அறை வீட்டை எளிதாக கட்டலாம் என்று கூறப்படுகிறது.

இதில் ஒவ்வொரு பாகத்தையும் மிக மிக துல்லியமாக கணக்கிட்டு வடிவமைத்தால் நெருக்கடி என்பதே தெரியாத அளவுக்கு உங்கள் புதிய வீடு அமையும் என்கின்றனர் கட்டட வடிவமைப்பாளர்கள். குறைந்த பரப்பளவு நிலத்தில், தரைதளம் முதல் தளம் என்ற அடிப்படையில் வடிவமைக்கும் போது, பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வீட்டை பெறலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
விவசாயிகள், பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! கூட்டுறவு கடன் திட்டங்களின் புதிய அறிவிப்புகள் - முழு விவரம் இதோ
விவசாயிகள், பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! கூட்டுறவு கடன் திட்டங்களின் புதிய அறிவிப்புகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget