மேலும் அறிய

வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு..

2021 ஜனவரி 28-ம் தேதி அரசுடமையாக்கப்பட்ட வேதா நிலையத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.   

ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லமான வேதா நிலையத்தை  அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது.   

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த குடியிருப்பான வேதா நிலையம் இல்லத்தினை நினைவுச் சின்னமாக மாற்றப்படும் என்று முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது. இது தொடர்பான அரசாணை வெளியிட்டதோடு, இந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செலுத்தியது. இதன் மூலம், ஜெயலலிதா குடியிருப்பு அரசின் சொத்தாகியது. வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் நகர  நீதிமன்றத்தைநாடி, தங்களுக்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 


வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு..

 

இந்த நடவடிக்கையை எதிர்த்து, ஜெயலலிதாவின்  அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சேஷசாயி விசாரித்து வந்தார். தங்கள் மனுவில், "காலஞ்சென்ற ஜெயலலிதா என்ற தனிநபர் வாழ்ந்த குடியிருப்பை அரசுடமையாக்க அரசுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். குடியிருப்பை, நினைவில்லமாக மாற்றவும் தடை விதிக்க வேண்டும். 

மேலும், ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கில், தங்களை நேரடி வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில், தங்களிடம் கலந்தாலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர நீதிமன்றத்தில்  வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைப்பாடு சட்டத்திற்கு எதிரானது" என்று தெரிவித்திருந்தனர்.    


வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு..

வழக்கின் அனைத்து வாதங்களையும் விசாரித்த நீதிபதி சேஷசாயி, இன்று மதியம் தீர்ப்பை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, 'வேதா நிலையம்' இல்லத்தை அரசு நினைவில்லமாக மற்றுதல் தொடர்பாக, புகழேந்தி என்பவரால் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்ட பரிந்துரைகளை வழங்கியது ·

"வேதா நிலையம்" இல்லத்தை கையகப்படுத்தி அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு பொதுமக்களின் வரிப்பணம் அதிகம் செலவிடுவதை கருதி, அதனை தவிர்ப்பதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

· "வேதா நிலையம்" இல்லத்தை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம்.

· "வேதா நிலையம்" இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும், மற்றொரு பகுதியை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தது. 

இருப்பினும், இந்த பரிந்துரைகள் கவனமாக பரிசீலனை செய்த அரசு, வேதா இல்லத்தை  முதலமைச்சரின் இல்லமாக மாற்ற சாத்தியக்கூறுகள் இல்லை என முடிவெடுத்தது.    

இதனையொட்டி, 2021 ஜனவரி 28ம் தேதி அரசுடமையாக்கப்பட்ட வேதா நிலையத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget