மேலும் அறிய

'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்

அடிப்படை வசதி செய்துகொடுக்காத காரணத்தால், மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். கூட்ட நெரிசலில் சிக்கி, நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்- ஈபிஎஸ்

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை எனவும் அதைச் செய்யாதது உளவுத் துறையின் தோல்வி என்றும் இது கையலாகாத்தனம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

5 பேர் பலி, 102 பேர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியைக் காணச் சென்ற பொதுமக்களில் 5 பேர் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தனர். 102 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். அரசு உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யாததே இதற்குக் காரணம் என்று எதிர்க் கட்சிகளும் பொது மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்புக்கு திமுக அரசே காரணம் என்று எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சாகச நிகழ்ச்சிக்கு வந்த பொது மக்கள் அருந்த போதிய குடிநீர் வசதி செய்யப்படவில்லை. அடிப்படை வசதி செய்துகொடுக்காத காரணத்தால், மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். கூட்ட நெரிசலில் சிக்கி, நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று தகவலை உளவுத் துறை மூலம் பெற்று, அதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தால், இத்தனை பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

பொம்மை முதல்வரே காரணம்

முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு போதிய ஏற்பாடுகளை செய்யாமல் விட்டது அவரின் செயலற்ற தன்மை, கையாலாகாத தனத்தைக் காட்டுகிறது. இது வெட்ககேடான விஷயம். இதே விமான சாகச நிகழ்ச்சியை பல்வேறு மாநிலங்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளன. ஆனால் தமிழகத்தில் அப்படி நடக்கவில்லை. திறமையற்ற பொம்மை முதல்வர் செயல்பட்டு வரும் காரணத்தால், இவ்வாறு நடந்துள்ளது.

செய்யத் தவறிய திமுக அரசு

மக்களைக் காப்பதுதான் அரசின் கடமை. இது உளவுத்துறையின் தோல்வி. இதைச் செய்யத் தவறியது திமுக அரசு. முதல்வர் ஸ்டாலின்தான் நிகழ்ச்சியைக் கண்டுகளியுங்கள் என்று அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, போதிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை. 

அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக அரசியல் செய்யவில்லையா? அரசே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம். இழப்பீடுகள் எந்த வகையிலும் போதாது.  விலைமதிப்பற்ற உயிர்களுக்கு அவை எவ்விதத்திலும் ஈடாகாது’’ . 

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்ததை யாரும் அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சு
Breaking News LIVE 7 Oct : வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்ததை யாரும் அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்ததை யாரும் அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சு
Breaking News LIVE 7 Oct : வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்ததை யாரும் அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சு
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Embed widget