TNEB JOB: மின் வாரியத்தில் 1,850 பணியிடங்கள்.! தேர்வு விதிமுறைகளில் அதிரடி மாற்றம்- தேர்வர்களுக்கு குஷியான அறிவிப்பு
TNEB JOB: மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் மின் கம்பம் ஏறி இறங்கும் தேர்வுக்கு ஷூ பயன்படுத்தலாம் என விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின் வாரியத்தில் காலிப்பணியிடம்
அரசு பணியில் இணைய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அந்த வகையில் பல லட்சம் காலிப்பணியிடம் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு குரூப் 2, குரூப் 4 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்று தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதே போல மின் வாரியத்தில் பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 1,850 கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மின் வாரிய தேர்வில் திருத்தம்
இந்தத் தேர்வின் முடிவுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து உடற்தகுதி தேர்வானது நடைபெறவுள்ளது. இதன் படி மின் கம்பத்தில் ஏறுவது தொடர்பாக மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான தேர்வில் உடல் தகுதி தேர்வு நடைபெறவுள்ள நிலையில், விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதி தேர்வில், மின் கம்பம் ஏறி இறங்கும் தேர்வுக்கு ஷூ பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷூ அணிந்து மின் கம்பம் ஏறும் தேர்வு
அந்த வகையில் விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக வெறும் காலில் மின்கம்பம் ஏறி இறங்க வேண்டும் என்ற விதி இருந்தது தற்போது மின் வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில், வெறும் காலில் மின் கம்பம் ஏற வேண்டும் என்ற விதியை திருத்தி ஷூ அணியலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி மின் கம்பத்தில் ஷூ அணிந்து 30 அடி உயர மின் கம்பத்தை 8 நிமிடங்களில் ஏற வேண்டும் என விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















