மேலும் அறிய

சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு

சொத்து வாங்கும் போது பத்திரத் தயாரிப்பில் கவனம் தேவை. சார்-பதிவாளர்கள் எச்சரிக்கை

"பத்திரம் உருவாக்குவதில் கவனம்"

சொத்து வாங்கும் போது அது தொடர்பான ஆவணங்களை சரி பார்ப்பதில் மக்கள் கவனம் செலுத்தும் அளவுக்கு தங்கள் பெயருக்கு மாற்றுவதற்கான பத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனக் குறைவாக செயல்படுகின்றனர். நீங்கள் வாங்கும் சொத்து வில்லங்கம் எதுவும் இல்லாதததாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் , அதே நேரத்தில் , உங்கள் பெயருக்கு உருவாக்கப்படும் புதிய பத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். சொத்து பரிமாற்றத்துக்கான விற்பனை ஒப்பந்தம் , கிரையப் பத்திரம் ஆகியவற்றை யார் வாயிலாக தயாரிப்பது என்பதில் தெளிவாக செயல்பட வேண்டும்.

" ஆவணம் தயாரிப்பதில் கவனம் "

சொத்தின் பழைய ஆவணங்கள் அனைத்தும் சரியா இருக்கிறது என்று அமைதியாகி விடாமல் , அடுத்த ஆவணம் தயாரிப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு சொத்து வாங்கும் போது அதன் மொத்த மதிப்பில், ஏழு சதவீதம் முத்திரை தீர்வை , 2 சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் ஏழு சதவீத முத்திரை தீர்வைக்கு இணையாக முத்திரை தாள்கள் வாங்கி பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

சொத்தின் மதிப்பு குறைவாக இருந்த போது அதில், ஏழு சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்கி பயன்படுத்துவதில் எவ்வித பிரச்னையும் எழவில்லை. ஆனால், தற்போது சொத்தின் கைமாறும் மதிப்பு, 60 லட்சம் ரூபாய் முதல் , ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செல்கிறது.

இந்த உயர் மதிப்பில், ஏழு சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்கும் போது பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீங்கள் வாங்கும் சொத்தின் கைமாறும் மதிப்பு எதுவாக இருந்தாலும் , அதில் , ஏழு சதவீத முத்திரைத் தீர்வைக்கு முழுவதும் முத்திரைத் தாள் வாங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

" இ - ஸ்டாம்ப் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் " 

இதில் குறிப்பிட்ட தொகைக்கு மட்டும் முத்திரைத் தாள்கள் வாங்கி விட்டு மீதி தொகையை வங்கிக் கணக்கு வாயிலாக நேரடியா செலுத்தலாம். உங்கள் சொத்து பத்திரம் என்ன மதிப்பு முத்திரைத் தாளில் எழுதப்பட வேண்டும் என்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு, அதிகபட்சமாக , 50,000 ரூபாய் வரையிலான மதிப்புகளில் முத்திரை தாள்களை வாங்கி பயன்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் , இதற்கு மேற்பட்ட முத்திரைத் தாள்களை வாங்கும் போது பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக , உயர் மதிப்பு முத்திரை தாள்களை வாங்குவதில் ரொக்க பரிமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்கள் வருமான வரித்துறை கண்காணிப்பில் வரும் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, சொத்து பத்திரத்தில் குறைந்தபட்ச தொகைக்கு முத்திரைத் தாள்களை வாங்கி விட்டு , மீதித் தொகைக்கு இ - ஸ்டாம்ப், அல்லது நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தலாம். சொத்து வாங்குவோர் இதையும் கவனமாக வைத்து செயல்பட வேண்டும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
"விஜய் அடுத்த பிரதமரா?" ஸ்ரீபெரும்புதூரில் சட்டென பதிலளித்த டி.கே. சிவகுமார்! பரபரப்பு பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget