மேலும் அறிய

தேவாலயம் சென்றதால் ரத்து செய்யப்பட்ட சாதி சான்றிதழ் - மீண்டும் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

’’கிறிஸ்தவ அடையாளங்கள் உள்ளன என்று கூறி அவரது சாதி சான்றிதழை எந்தவித ஆவணமும் இன்றி ரத்து செய்வதை ஏற்க முடியாது. சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்’’

தேவாலயம் செல்வதால் பெண் மருத்துவரின் பட்டியலின சாதி சான்றிதழை கடந்த  2013 ஆம் ஆண்டு ரத்து செய்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண் மருத்துவர் ஒருவர் 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு ஒன்றில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அப்பெண் கூறுகையில், "நான் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மதுரை மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவம் பயின்று தற்போது தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன். நான் இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். எனது, தந்தையும், தாயும் இதே வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், நான் இதே வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்துவரை திருமணம் செய்து கொண்டேன். இதற்கான வீடியோ ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. நான் தொடர்ந்து இந்துவாகவே உள்ளேன். என்னுடைய சாதி சான்றிதழிலும் இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்றே உள்ளது.


தேவாலயம் சென்றதால் ரத்து செய்யப்பட்ட சாதி சான்றிதழ் - மீண்டும் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
தேவாலயம் சென்றதால் ரத்து செய்யப்பட்ட சாதி சான்றிதழ் - மீண்டும் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

இந்த சூழலில், நான் அரசு மருத்துவர் நியமனத்திற்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றேன். அப்பொழுது நடைபெற்ற சாதி சான்றிதழ் சரிபார்ப்பின்போது நான் மாவட்ட ஆட்சியர் முன் ஆஜராகி, இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ்களை வழங்கினேன். நான் இந்து முறைப்படிதான் எனது திருமணம் நடந்தது என்பதற்கான ஆதாரங்களையும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவிடம் வழங்கினேன். ஆனால், அவர்கள் எதையுமே பொருட்படுத்தாமல், எனது வீட்டில் கிறிஸ்தவ இலட்சினை உள்ளது என்றும் எனது கிளினிக்கில் கிறிஸ்தவம் தொடர்பான சிலுவை உள்ளதாகவும் கூறி எந்தவித ஆவணங்களும் இல்லாமல் எனது இந்து பட்டியலின சாதி சான்றிதழை கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்துவிட்டனர். எனவே, எனது சாதி சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தேன்" என விவரித்தார். இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணைக்கு வந்தது.


தேவாலயம் சென்றதால் ரத்து செய்யப்பட்ட சாதி சான்றிதழ் - மீண்டும் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி எம். துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் தாய், தந்தை இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதன் அடிப்படையில், மனுதாரரும் இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் பெற்றுள்ளார். இதற்கிடையே, எந்தவித ஆதாரமுமின்றி மனுதாரர் வீட்டில் கிறிஸ்தவ இலட்சினை இருந்தது என்றும் கிறிஸ்தவ மதம் தொடர்பான அடையாளங்கள் இருந்தன என்றும் அதனால் அவர் கிறிஸ்தவர் என கூறுவது ஏற்புடையது அல்ல.


ஆகவே, அவர் குடும்பத்துடன் தேவாலயத்திற்குச் செல்கிறார் என்று கருதி அவருடைய இந்து பட்டியலின சாதி சான்றிதழை ரத்து செய்ததும் ஏற்புடையது அல்ல. ஒவ்வொருவரும் மற்றொரு மதத்தை சார்ந்தவரை, மற்றொரு சமுதாயத்தைச் சார்ந்தவரை முறைப்படி உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும். பிறர் பழக்க வழக்கங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இதுதான் அரசியலமைப்பு நமக்கு கற்றுக்கொடுத்த பாடம். எனவே மனுதாரர், குடும்பத்துடன் தேவாலயத்திற்குச் செல்கிறார். அவர் வீட்டில் கிறிஸ்தவ அடையாளங்கள் உள்ளன என்று கூறி அவரது சாதி சான்றிதழை எந்தவித ஆவணமும் இன்றி ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் பரந்த மனப்பான்மையுடன் தெளிவாக, மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் சாதி சான்றிதழை ரத்து செய்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், முன்பு மனுதாரருக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மீட்கப்பட வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget