மேலும் அறிய

தேவாலயம் சென்றதால் ரத்து செய்யப்பட்ட சாதி சான்றிதழ் - மீண்டும் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

’’கிறிஸ்தவ அடையாளங்கள் உள்ளன என்று கூறி அவரது சாதி சான்றிதழை எந்தவித ஆவணமும் இன்றி ரத்து செய்வதை ஏற்க முடியாது. சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்’’

தேவாலயம் செல்வதால் பெண் மருத்துவரின் பட்டியலின சாதி சான்றிதழை கடந்த  2013 ஆம் ஆண்டு ரத்து செய்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண் மருத்துவர் ஒருவர் 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு ஒன்றில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அப்பெண் கூறுகையில், "நான் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மதுரை மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவம் பயின்று தற்போது தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன். நான் இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். எனது, தந்தையும், தாயும் இதே வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், நான் இதே வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்துவரை திருமணம் செய்து கொண்டேன். இதற்கான வீடியோ ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. நான் தொடர்ந்து இந்துவாகவே உள்ளேன். என்னுடைய சாதி சான்றிதழிலும் இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்றே உள்ளது.


தேவாலயம் சென்றதால் ரத்து செய்யப்பட்ட சாதி சான்றிதழ் - மீண்டும் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
தேவாலயம் சென்றதால் ரத்து செய்யப்பட்ட சாதி சான்றிதழ் - மீண்டும் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

இந்த சூழலில், நான் அரசு மருத்துவர் நியமனத்திற்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றேன். அப்பொழுது நடைபெற்ற சாதி சான்றிதழ் சரிபார்ப்பின்போது நான் மாவட்ட ஆட்சியர் முன் ஆஜராகி, இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ்களை வழங்கினேன். நான் இந்து முறைப்படிதான் எனது திருமணம் நடந்தது என்பதற்கான ஆதாரங்களையும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவிடம் வழங்கினேன். ஆனால், அவர்கள் எதையுமே பொருட்படுத்தாமல், எனது வீட்டில் கிறிஸ்தவ இலட்சினை உள்ளது என்றும் எனது கிளினிக்கில் கிறிஸ்தவம் தொடர்பான சிலுவை உள்ளதாகவும் கூறி எந்தவித ஆவணங்களும் இல்லாமல் எனது இந்து பட்டியலின சாதி சான்றிதழை கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்துவிட்டனர். எனவே, எனது சாதி சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தேன்" என விவரித்தார். இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணைக்கு வந்தது.


தேவாலயம் சென்றதால் ரத்து செய்யப்பட்ட சாதி சான்றிதழ் - மீண்டும் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி எம். துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் தாய், தந்தை இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதன் அடிப்படையில், மனுதாரரும் இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் பெற்றுள்ளார். இதற்கிடையே, எந்தவித ஆதாரமுமின்றி மனுதாரர் வீட்டில் கிறிஸ்தவ இலட்சினை இருந்தது என்றும் கிறிஸ்தவ மதம் தொடர்பான அடையாளங்கள் இருந்தன என்றும் அதனால் அவர் கிறிஸ்தவர் என கூறுவது ஏற்புடையது அல்ல.


ஆகவே, அவர் குடும்பத்துடன் தேவாலயத்திற்குச் செல்கிறார் என்று கருதி அவருடைய இந்து பட்டியலின சாதி சான்றிதழை ரத்து செய்ததும் ஏற்புடையது அல்ல. ஒவ்வொருவரும் மற்றொரு மதத்தை சார்ந்தவரை, மற்றொரு சமுதாயத்தைச் சார்ந்தவரை முறைப்படி உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும். பிறர் பழக்க வழக்கங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இதுதான் அரசியலமைப்பு நமக்கு கற்றுக்கொடுத்த பாடம். எனவே மனுதாரர், குடும்பத்துடன் தேவாலயத்திற்குச் செல்கிறார். அவர் வீட்டில் கிறிஸ்தவ அடையாளங்கள் உள்ளன என்று கூறி அவரது சாதி சான்றிதழை எந்தவித ஆவணமும் இன்றி ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் பரந்த மனப்பான்மையுடன் தெளிவாக, மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் சாதி சான்றிதழை ரத்து செய்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், முன்பு மனுதாரருக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மீட்கப்பட வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
Embed widget