மேலும் அறிய

கச்சத்தீவு மீட்பு விவகாரம்...மத்திய அரசின் முடிவில் உயர் நீதிமன்றம் தலையிட முடியுமா? தலைமை நீதிபதி பரபர கருத்து!

கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு மீட்பு விவகாரம்:

கச்சத்தீவு மீட்பு என்பது அரசியில் களத்தில் புதிய முழக்கம் அல்ல. தமிழ்நாட்டில்  ஆட்சியில் இருக்கும் திமுக மற்றும் அதன் எதிர்க்கட்சியான அதிகமுகவும் கச்சத்தீவை மீட்போம் என்று பல தேர்தலில் வாக்குறுதி வழங்கியுள்ளன. இந்த விவகாரம் தற்போது வரை நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டு வருகிறது. நூறு ஆண்டுகளாக நிலவி வரும் இந்த விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. திமுக, அதிமுக, பாஜக என கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் கூட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலக்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக வரலாறு தெரியாமல் உளறிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில், இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை  இந்த விவகாரம் பேசப்பட்டது.

மதுரை கிளையில் மனு:

சென்னையைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர்  இந்தியா மற்றும் இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.  இந்த உடன்படிக்கையின் படி பாரம்பரியமாக மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எந்த இடையூறும் செய்யக்கூடாது என உள்ளது. 
 
1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என RTI தகவல் உள்ளது. இதுவரை தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளனர். அதன் பின்பு 2013 ஆம் ஆண்டு 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்த ஆண்டு ஜூன் 26ஆம் தேதி 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  

”மத்திய அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது"

1974 ம் ஆண்டு இந்தியா - இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையின் படி இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர். எனவே, இடைக்கால உத்தரவாக 22 மீனவர்களை இந்தியா கொண்டுவர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், 1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை என இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய  அரசு எடுக்க உத்தரவிட வேண்டும்" எனவும் மனுவில் கூறியிருந்தார். 
 
இந்த மனு தலைமை நீதிபதி கங்க பூர்வாலா, நீதிபதி குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது ஒன்றிய அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் நீதிமன்றம் ஒருபோதும் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
Embed widget