Breaking LIVE: நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா நியமனம்
நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக நான்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
LIVE
Background
மழை காரணமாக நீலகிரி மாவட்டட்தின் உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை இன்று (ஜூலை.06) அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதம் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
மேலும், நீலகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை வானிலை மையம்
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இது குறித்து நேற்று (ஜூலை.05) வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தாவது:
”06.07.2022 மற்றும் 07.07.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
08.07.2022 மற்றும் 09.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இன்று குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் வரும் ஜூலை 9ஆம் தேதி வரை இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Breaking LIVE: நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா நியமனம்
மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் ராஜினாமா
மத்திய உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி.சிங்கும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா..!
மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா
மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தர் அபாஸ் நக்வி ராஜினாமா. குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் முக்தர் அப்பாஸ் நக்வி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில் ராஜினாமா.
என்ஜீன் செயலிழப்பு - விமானம் அவசர தரையிறக்கம்
என்ஜீன் செயலிழப்பால் விஸ்தாரா பயணிகள் விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது