புத்தகம் ரெடி.! தேவையென்றால் அனுப்பி வைப்போம்.! பாஜக விவாத போருக்கு முற்றுப்புள்ளி வைத்த திருமா!
பாஜக - விசிக இடையேயான விவாதம் தொடர்பான வார்த்தைப்போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அண்ணாமலையின் பேச்சு..
பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் - புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஏப்.20ம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திருமாவளவனுக்கு சவால் விட்டார். "இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது? ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திருமாவளவன் தயாராக இருக்கிறாரா? நான் இதுவரை 2000 புத்தகங்கள் படித்துள்ளேன்" என்றார்.
இதற்கு பதில் கொடுத்த திருமா, 'அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவருடன் விவாதிக்க விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஒரு சப்-ஜூனியரை வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம் என்றார். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சங்கத்தமிழன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் ஒன்றை விடுத்தார். அதில், '' 24ம் தேதி உங்களை நேரில் சந்திக்க முடியுமா? நேரில் விவாதம் செய்ய வேண்டும் என்கிறார். மேலும் அம்பேத்கரின் தொகுப்பு நம்பர் 8 என்ற புத்தகத்தை படித்து வைத்திருங்கள் என்றும் கூறுகிறார்.
26ந்தேதி கச்சேரி இருக்கு... @annamalai_k pic.twitter.com/m7RbB2rPAq
— U2 Brutus (@U2Brutus_off) April 22, 2022
சங்கத்தமிழன் விடுத்த சவால்..
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, '' 24ம் தேதி பிஸியாக இருப்பதாகவும், 26ம் தேதி நேரில் சந்திக்கலாம் என்றும் தெரிவித்தார். சங்கத்தமிழன் விடுத்த சவாலை ஏற்கும் விதமாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், அண்ணன் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26 ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம். அதன் பின்பு அண்ணன் தொல் திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும், தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன். அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது பாஜக அலுவலகத்திற்கு 26 ஆம் தேதி வரவேற்கின்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு" என்றார்.
திருமா பதிவு..
இந்நிலையில் இன்று சங்கத்தமிழன் நேரில் போவாறா? புத்தக பரிமாற்றங்கள் நடக்குமா? விவாதம் உண்டா என்றெல்லாம் சோஷியல் மீடியா பரிதவித்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த விவாத பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திருமாவளவன். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன், ''பாஜக தமிழகத் தலைவருக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் இந்துவத்தின் புதிர்கள் எனும் புத்தகத்தை வழங்கிட பாஜக அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழன் அவர்களிடம் கூறியுள்ளேன். எனவே, இளஞ்சிறுத்தைகள் அங்கே செல்வதைத் தவிர்க்கவும். அவர் இதுவரை 20000 புத்தகங்களைப் படித்திருக்கிறார் எனும்போது அவற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்களும் இருக்கலாம். எனினும் அவருக்குத் தேவையெனில் அம்பேத்கரின் நூல்களை அஞ்சலில் அனுப்பி வைப்போம். அல்லது அவர் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளட்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கையெழுத்திட்டு அண்ணாமலைக்கு கொடுத்தனுப்ப தயார் நிலையில் இருக்கும் 5 புத்தகங்கள் விவரத்தையும் விசிக கட்சியினர் பகிர்ந்துள்ளனர். அதில், பெரியார் இன்றும் என்றும், அம்பேத்கர் இன்றும் என்றும், அமைப்பாய்த் திரள்வோம், அரசியலமைப்புச் சட்டம் 2, நக்சல்பாரி முன்பும் பின்பும், இந்து மதத்தில் புதிர்கள் ஆகிய புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன
பாஜக தமிழகத் தலைவருக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் இந்துவத்தின் புதிர்கள் எனும் புத்தகத்தை வழங்கிட பாஜக அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழன் அவர்களிடம் கூறியுள்ளேன். எனவே, இளஞ்சிறுத்தைகள் அங்கே செல்வதைத் தவிர்க்கவும். @tnbjp #Vck pic.twitter.com/eoTHmtcFe3
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 26, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets