மேலும் அறிய

சென்னை விமானத்துக்குள் 174 பயணிகள்.! திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டல்! கடைசி நேர பரபரப்பு!

சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பும் துபாய் விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து துபாய்க்கு இன்று காலை 7.35 மணிக்கு இண்டிகோ விமானம் ஒன்று 174 பயணிகளுடன் பயணம் செய்ய இருந்தது. அந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்த பிறகு அதில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த விமானம் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அந்த விமானத்தில் தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னை விமான நிலையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் தீவிரமாக சோதனையிட்டனா்.  விமானத்திலிருந்த 174 பயணிகளையும் சோதனையிட்டனா்.ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது.

இதை அடுத்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அது சென்னை மணலியில் உள்ள ஒரு நபர் பேசியது தெரிந்தது. இதை அடுத்து சென்னை மாநகர போலீஸ், அவரை சுத்தி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவருடைய தங்கையும், தங்கை கணவரும் இன்று அந்த விமானத்தில் துபாய் செல்ல இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்குள் ஏதோ குடும்பப் பிரச்சனை இருப்பதால், அந்த பிரச்சனை காரணமாக இதை போல் வதந்தியை கிளப்பி விட்டார் என்று தெரியவந்தது. இதை அடுத்து அந்த மணலியைச் சேர்ந்த அந்த நபரை சென்னை மாநகர போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக துபாய் செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் தாமதமாக இன்று காலை 11 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க:செங்கல்பட்டு: நண்பரின் 8வயது மகளை வன்கொடுமை செய்த நபர்.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!


மங்களூரு இண்டிகோ விமானத்தில் நடந்த சம்பவம்:

கடந்த 16ஆம் தேதி மங்களூருவில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், ஒரு இளைஞர் அவருக்கு தெரிந்த பெண்ணிடம் மொபைலில் சாட் செய்து வந்துள்ளார். அப்போது விமானத்தில் இருந்த ஆணுக்கு அந்த பெண் தனது செல்போனில் இருந்து நீ ஒரு வெடிகுண்டு என்று வாட்சப்பில் அனுப்பிய மெசேஜ் அருகில் இருந்த பெண் பயணி தற்செயலாகப் படித்து தவறாகப் புரிந்து கொண்டு அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.

இதையடுத்து உடனடியாக, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு, விமானம் முழுவதும் ஏதேனும் நாசவேலை நடந்ததா என சோதிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விமானத்தில் இருந்த ஆண் பயணிக்கு, பெண் ஒருவர் நீ ஒரு வெடிகுண்டு என்று விளையாட்டாக சேட் செய்துள்ளார். இந்த சேட் அனைத்தையும் அருகிலிருந்து எதார்த்தமாக பார்த்து கொண்டிருந்த பெண் பயணி, வெடிகுண்டு என்றதும் பயத்தில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், புறப்பட இருந்த விமானம் நிறுத்தப்பட்டு அனைத்து பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. இதனால் 6 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு விமானம் மும்பை புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget