மேலும் அறிய

Ayutha Pooja 2024: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்! பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்!

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கோயில்களில் காலை முதலே சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது ஆயுத பூஜை. எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு அவர் செய்யும் தொழிலே பிரதான தெய்வம் ஆகும். செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் நாம் செய்யும் தொழிலை போற்றி வணங்கி விதமாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை கொண்டாட்டம்:

நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு காலை முதலே கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பக்தர்கள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆயுத பூஜையில் மக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்வது வழக்கம் ஆகும். பூக்கள், பழங்கள், அவல் பொரி வைத்து வீடுகளில் வழிபாடு செய்வது வழக்கம் ஆகும். ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கியமான சந்தைகளில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வரத்து நேற்று முன்தினம் முதலே வழக்கத்தை விட அதிகளவில் குவியத் தொடங்கியது.

பூக்கள், பழங்கள், காய்கறிகள் விற்பனை படுஜோர்:

சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கோவை என முக்கியமான நகரங்களின் பெரும் சந்தைகளில் நேற்று முதலே வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பூக்கள் சந்தையான தோவாளையில் பூக்கள் வரத்து வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது. இருப்பினும் தொடர் மழை காரணமாக பூக்கள் விலை எதிர்பார்த்ததை விட அதிகளவில் இருந்தது.

அதேபோல, காய்கறிகளின் விலையும் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. மழை காரணமாக வெங்காயம் மற்றும் தக்காளி வரத்து குறைந்தளவு இருப்பதால் வெங்காயம், தக்காளி விலை வழக்கத்தை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் ஆயுத பூஜை வழிபாடு மாலை நேரத்திலே நடைபெறும் என்பதால் இன்று காலையும் கடைகளில் வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. மஞ்சள், வாழை இலைகள், வாழைப்பழங்கள், பூஜைப் பொருட்கள் விற்பனை காலை முதலே தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சொந்த ஊருக்குச் சென்ற பக்தர்கள் கூட்டம்:

ஆயுத பூஜை, விஜயதசமி காரணமாக தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் போன்ற நகரங்களில் இருந்து நேற்று மாலை முதல் மக்கள் கூட்டம் பேருந்துகளில், ரயில்களில் அலைமோதியது. சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும், எழும்பூர் ரயில் நிலையத்திலும் சொந்த ஊர் செல்ல பேருந்துகளிலும், ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பேருந்துகளில் கூட்டம் அலைமோதியதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று காலையும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆயுத பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் போலீசார்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget