மேலும் அறிய

Spam Callகளை தடுக்க Airtel நெட்வொர்க்கின் புதிய தொழில்நுட்பம் - என்ன தெரியுமா ?

AI தொழில்நுட்பம் மூலம் ஸ்பேம் (spam) அழைப்புகளை கண்டறிந்து வாடிக்கையாளர்களுக்கு அலர்ட் ( Alert) கொடுக்கும் சேவையை துவங்கியது ஏர்டெல் நிறுவனம்

AI தொழில் நுட்பம் மூலம் Spam அழைப்புகள் கண்டுபிடிப்பு ;

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளை கண்டறிந்து எச்சரிக்கும் சேவை குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்தியாவின் முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் சேவைக்காக  AI தொழில்நுட்பம் மூலம் கடந்த 12 நாட்களில் ஸ்பேம் கண்டறியும் சேவையை துவங்கியது. 

Spam Calls - SMS தடுக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு நாளும் பயனாளிகளுக்கு ஸ்பேம் அழைப்புகளும், ஸ்பேம் குறுஞ்செய்திகளும் வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 112 மில்லியன் நிகழும் சாத்தியம் கொண்ட ஸ்பேம் அழைப்புகளையும் 3 மில்லியன் ஸ்பேம் SMS செய்திகளையும் வெற்றிகரமாகக் கண்டறிந்து தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அந்த ஸ்பேம் பாதிப்புகளில் இருந்து தங்கள் நெட்வொர்க் பயனாளிகளை ( வாடிக்கையாளர்களை பாதுகாக்க) ஏர்டெல் நிறுவனம், சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு AI தொழில் நுட்பத்தால், வாடிக்கையாளர்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகள் வரும் போது முன்னெச்சரிக்கையாக "ஸ்பேம் கால்" என்று எச்சரிக்கை ( Alert) செய்யும் வகையிலான சேவையை ஏர்டெல் துவக்கியுள்ளது. 

இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமைச் செயல் அதிகாரி தருண் விர்மாணி கூறும் போது ; 

இன்றைய டிஜிட்டல் லேண்ட்ஸ்கேப்பில் ஸ்பேம் அழைப்புகளும் சந்தேகத்திற்குரிய உரைகளும் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் கவலை தரும் விஷயமாக உள்ளன. இதற்குத் தீர்வு காண ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் எக்கோசிஸ்டத்தில் தங்கு தடை இல்லாமல் இயங்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நவீன AI தொழில்நுட்பத்தில் ஒரு தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்குவதுடன்
தமிழ்நாட்டில் உள்ள 29.8 மில்லியன் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சிறந்த மன அமைதியுடன் இருக்க இது உதவுகிறது. இந்தப் புதுமையான சலுகையின் மூலம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை நம்பிக்கைக்கு  உரியதாக உறுதிப்படுத்தி தொலைத்தொடர்பு தொழில்துறையில் ஒரு புதிய தரத்தை உருவாக்கியுள்ளது என்றார். 

அவரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஏர்டெல் நிறுவனத்தின் வர்த்தக தலைமை அதிகாரி பிரிஜேஸ் கூறுகையில் ,

தமிழ்நாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி. இன்றைக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மெசேஜ் மூலம் ஸ்பேம் வாடிக்கையாளர்களுக்கு பல விதங்களில் தொல்லையை கொடுக்கிறது.

இந்தியாவின் முதல் முறையாக ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு Anti Spam வசதியை முற்றிலும் இலவசமாக அறிவித்திருக்கிறோம். ஸ்பேமர்ஸ் பயன்படுத்தும் டெக்னாலஜி மூலம் முழுமையாக ஸ்பேமை பிரிக்கிறோம். இதை துவங்கிய 10 நாட்களில் 11 கோடி அழைப்புகளை ( Spam Calls ) என்று வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.

விரைவில் பிற மொழிகளிலும் Spam Call அலர்ட்

வரும் அழைப்புகள் ஸ்பேம் அழைப்பா அல்லது ஸ்பேம் மெசேஜா என்பதை மையப்படுத்தி பயனாளர்களுக்கு அதை தெரியப்படுத்துகிறோம் என்றும் தமிழ்நாட்டில் 3 கோடி ஏர்டெல் வாடிக்கையாளர்களின் இந்த ஸ்பேம் தடுப்பு மூலம் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Spam தொடர்பான எச்சரிக்கை தகவல்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டும் கொடுத்து வருவதாகவும் வருங்காலத்தில் பயனாளிகளின் வசதிக்கு ஏற்ப பிற மொழிகளிலும் அலார்ட் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்

தலைப்பு செய்திகள்

TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Embed widget