மேலும் அறிய

எதிர்பார்த்திருக்கும் வேலைவாய்ப்பு... விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்: ரெடியாக இருங்க

எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்வையிட்டு, அறிவிப்பு வெளியானவுடன் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் வங்கி தேர்வு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தஞ்சாவூர்: எஸ்பிஐ வங்கியில் கிளார்க் வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பட்டதாரி நண்பர்களே ரெடியாக இருங்கள். 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI)-வில் ஜூனியர் அசோசியேட் (Customer Support & Sales) / கிளர்க் பணியிடங்களுக்கான 2026-ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் இந்த அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகக்கூடும் என்பதால், தேர்வர்கள் தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எஸ்பிஐ தேர்வுக்கு அதிக எதிர்பார்ப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால், எஸ்பிஐ ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளம், பணிப் பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், ஓய்வூதிய பலன்கள் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் எஸ்பிஐ கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

விரைவில் வெளியாகலாம் அறிவிப்பு

இதுவரை எஸ்பிஐ சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இருப்பினும், முந்தைய ஆண்டுகளின் ஆட்சேர்ப்பு கால அட்டவணையைப் பார்க்கும்போது, 2026-ம் ஆண்டுக்கான கிளர்க் வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டும் அதேபோன்ற காலகட்டத்தில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக வங்கி தேர்வுக்கு தயாராகும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எந்த பணியிடங்கள்?

இந்த ஆட்சேர்ப்பில் Junior Associate (Customer Support & Sales) எனப்படும் கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வாடிக்கையாளர் சேவை, வங்கி பரிவர்த்தனைகள், கணக்கு பராமரிப்பு உள்ளிட்ட அலுவலகப் பணிகளை மேற்கொள்ள இந்த பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

கல்வித் தகுதி என்ன?

இந்த பணிக்கு விண்ணப்பிக்க, அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும், அறிவிப்பில் குறிப்பிடப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படலாம். மேலும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை படிக்க, எழுத மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். இது கட்டாய தகுதியாக கருதப்படுகிறது.

தேர்வு முறை எப்படி இருக்கும்?

எஸ்பிஐ கிளர்க் பணிக்கான தேர்வு பொதுவாக நான்கு கட்டங்களாக நடைபெறும்.

முதல் நிலை (Preliminary) எழுத்துத் தேர்வு
முதன்மை (Main) எழுத்துத் தேர்வு
உள்ளூர் மொழித் திறன் சரிபார்ப்பு
சான்றிதழ் சரிபார்ப்பு

இந்த ஆட்சேர்ப்பில் நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் அடுத்த கட்டங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

முன்கூட்டியே தயாராகுங்கள்

அறிவிப்பு வெளியானதும் ஆன்லைன் விண்ணப்ப பதிவு உடனடியாக தொடங்கப்படும். எனவே, பட்டப்படிப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார், புகைப்படம், கையொப்பம், சாதி மற்றும் பிற தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்திருக்குமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்வையிட்டு, அறிவிப்பு வெளியானவுடன் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் வங்கி தேர்வு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

போட்டி கடுமையாக இருக்கும்

எஸ்பிஐ கிளர்க் தேர்வு நாடு முழுவதும் அதிக போட்டி நிறைந்த அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் ஒன்றாகும். எனவே, அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்காமல், தற்போது கணிதம், தர்க்கத் திறன், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு போன்ற பாடங்களில் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

எதிர்பார்த்திருக்கும் வேலைவாய்ப்பு... விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்: ரெடியாக இருங்க
எதிர்பார்த்திருக்கும் வேலைவாய்ப்பு... விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்: ரெடியாக இருங்க
Ashta Varahi: அஷ்ட வராஹி சுவாசினி பூஜை - இவ்ளோ பலன்கள் இருக்கா? எப்போது? எப்படி கொண்டாட வேண்டும்?
அஷ்ட வராஹி சுவாசினி பூஜை - இவ்ளோ பலன்கள் இருக்கா? எப்போது? எப்படி கொண்டாட வேண்டும்?
பேராவூரணியில் பரபரப்பின் உச்சம்... காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் போராட்டம்: பின்னணி என்ன?
பேராவூரணியில் பரபரப்பின் உச்சம்... காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் போராட்டம்: பின்னணி என்ன?
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget