மேலும் அறிய

SP Velumani: எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு முடக்கம் - லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை!

லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. அதன் அடுத்த கட்டமாக தற்போது அவரது வங்கிக்கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கிக்கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது.  டெண்டர்களை தமக்கு நெருக்கமானவர்களுக்கு அளித்த முறைகேடு தொடர்பாக இரண்டு நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. அதன் அடுத்த கட்டமாக தற்போது அவரது வங்கிக்கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக,

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக 2018 ம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். கோவை மாவட்டத்தில் எஸ்.பி. வேலுமணி இல்லம், அவரது சகோதரர் அன்பரசன் இல்லம் உள்ளிட்ட 42 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

 

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையை துவக்கினர். 10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பாக திரண்டர். நேரம் ஆக ஆக தொண்டர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது. 300 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திரண்டதால், 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.


SP Velumani: எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு முடக்கம் - லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை!

வடவள்ளி பகுதியில் உள்ள கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே நெஞ்சு வலி காரணமாக சந்திர பிரகாஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கேசிபி இன்ஜினியரிங் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

 

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் ஒரு இடத்திலும் நடத்தப்பட்ட சோதனையில் 13 லட்ச ரூபாய் பணம், ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி சோதனை தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார். தனது பேஸ்புக் பக்கத்தில், ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

DMK Stalin: ஸ்டாலின் மாடலுக்கு எரிமேடை? புள்ளைய ஏத்தி விடமுடியாதோ? காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்
DMK Stalin: ஸ்டாலின் மாடலுக்கு எரிமேடை? புள்ளைய ஏத்தி விடமுடியாதோ? காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்
Tiruchendur: அரோகரா! தொடங்கிய யாகசாலை பூஜை.. களைகட்டும் திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்.. குவியப்போகும் 10 லட்சம்...
Tiruchendur: அரோகரா! தொடங்கிய யாகசாலை பூஜை.. களைகட்டும் திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்.. குவியப்போகும் 10 லட்சம்...
TVK Vijay: லாக்கப் மரணம்; அராஜக அரசு, சிறப்பு விசாரணை தேவை - திமுகவை விளாசிய விஜய்
TVK Vijay: லாக்கப் மரணம்; அராஜக அரசு, சிறப்பு விசாரணை தேவை - திமுகவை விளாசிய விஜய்
Tamilnadu Roundup: சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் மரணம்.. திமுக அரசை விளாசிய விஜய் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் மரணம்.. திமுக அரசை விளாசிய விஜய் - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”திமுக சூழ்ச்சியில் ராமதாஸ்!விசிகவுக்கு திடீர் பாசம் ஏன்?”பகீர் கிளப்பும் அன்புமணி!
அமைச்சர் திடீர் ராஜினாமா!3 MLA-க்கள் பதவி விலகல்..புதுச்சேரி அரசியலில் TWIST
லாரியில் சிக்கிய BIKE மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி | Villupuram | Accident News
Train Attack | “அய்யோ அடிக்காதீங்கம்மா” மூதாட்டியை தாக்கிய பெண்கள்! ரயிலில் நடந்த கொடூரம்!
Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Stalin: ஸ்டாலின் மாடலுக்கு எரிமேடை? புள்ளைய ஏத்தி விடமுடியாதோ? காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்
DMK Stalin: ஸ்டாலின் மாடலுக்கு எரிமேடை? புள்ளைய ஏத்தி விடமுடியாதோ? காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்
Tiruchendur: அரோகரா! தொடங்கிய யாகசாலை பூஜை.. களைகட்டும் திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்.. குவியப்போகும் 10 லட்சம்...
Tiruchendur: அரோகரா! தொடங்கிய யாகசாலை பூஜை.. களைகட்டும் திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்.. குவியப்போகும் 10 லட்சம்...
TVK Vijay: லாக்கப் மரணம்; அராஜக அரசு, சிறப்பு விசாரணை தேவை - திமுகவை விளாசிய விஜய்
TVK Vijay: லாக்கப் மரணம்; அராஜக அரசு, சிறப்பு விசாரணை தேவை - திமுகவை விளாசிய விஜய்
Tamilnadu Roundup: சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் மரணம்.. திமுக அரசை விளாசிய விஜய் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் மரணம்.. திமுக அரசை விளாசிய விஜய் - தமிழகத்தில் இதுவரை
இன்று முதல் ரயில் கட்டண உயர்வு ! புறநகர் ரயில் நிலை என்ன? முழு விவரம்!
இன்று முதல் ரயில் கட்டண உயர்வு ! புறநகர் ரயில் நிலை என்ன? முழு விவரம்!
Bihar Road: நட்ட நடுரோட்ல குத்தவெச்ச மரங்கள்.. எப்புட்றா வண்டி ஓட்றது? பாலத்திற்கே சவால் விடுக்கும் சாலை
Bihar Road: நட்ட நடுரோட்ல குத்தவெச்ச மரங்கள்.. எப்புட்றா வண்டி ஓட்றது? பாலத்திற்கே சவால் விடுக்கும் சாலை
எங்களையே விமர்சிப்பியா? சைபர் தாக்குதல்.. அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்!
எங்களையே விமர்சிப்பியா? சைபர் தாக்குதல்.. அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்!
lock Up Death: ”அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார்” - 5 காவலர்கள் கைது, சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
lock Up Death: ”அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார்” - 5 காவலர்கள் கைது, சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Embed widget