மேலும் அறிய

ஆன்லைன் ரம்மியால் இவ்வளவு உயிரிழப்புகளா..? - அன்புமணி ராமதாஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு முதலமைச்சருக்கும் ஆளுநருக்கு பிரச்சினை என்றால், மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில்  உள்ள தனியார் மண்டபத்தில், பாட்டாளி மக்கள் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில், கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
 
ஆன்லைன் ரம்மி விவகாரம்
ஆன்லைன் ரம்மியால் இவ்வளவு உயிரிழப்புகளா..? - அன்புமணி ராமதாஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்
 
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பம் முதலே போராடி வருகிறது. தடை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்தும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. முதலமைச்சருக்கும், ஆளுநருக்கு பிரச்சனை என்றால், மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். இந்த நான்கைந்து ஆண்டுகளில் , எங்களுக்கு தெரிந்து 85 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தெரியாமல் 500க்கும் மேற்பட்டவர் இருக்கலாம். இந்த 15 மாதத்தில் மற்றும் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆன்லைன் ரம்மியால் இவ்வளவு உயிரிழப்புகளா..? - அன்புமணி ராமதாஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்
 
இரண்டாவது விமான நிலையம் அவசியம் ஆனால்..
 
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது அவசியமானது இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் அதை எங்கே அமைக்கிறோம் என்பது தான் கேள்வி, தமிழக அரசு 6 இடங்கள் தேர்வு செய்து வைத்திருந்தது.  இது தொடர்பாக பாமக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது, மக்கள் எல்லாம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிறது, எங்களிடம் கருத்துக்களை பெற அரசிடம் தெரிவித்திருந்தோம் .ஆனால் அரசு இதுவரை எங்களை அழைக்கவில்லை . திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான,  5000-கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருக்கிறது. அந்த இடத்தில் விவசாயம் பண்ண முடியாது, என்பதால் அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க முடியும், அந்த இடத்தில் விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு ஆய்வு செய்து, மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும்.

ஆன்லைன் ரம்மியால் இவ்வளவு உயிரிழப்புகளா..? - அன்புமணி ராமதாஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்
 
 
போதையில் சிக்கிய தமிழ்நாடு
 
தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் அதிக அளவு இளைஞர்கள்  பாதிப்படைந்துள்ளனர். இதை தடுத்து நிறுத்த பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர் போதை பொருட்களை தடை செய்ய ஒரு முறை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு  10 நாட்கள் வேலை செய்தார்கள்.  ஆனால் மீண்டும் போதை பொருள் விற்பனை நடைபெற்று தான் வருகிறது. முதலமைச்சர் இதுகுறித்து மாதம் கூட்டம் நடத்தி, காவல்துறை அதிகாரிகள் கண்டித்துடன் இருக்க உத்தரவிட வேண்டும். போதை பொருள் விற்பனை நடைபெற்றால், அந்த பகுதியில் இருக்கும் உதவி ஆய்வாளரை பணி நீக்கம் செய்யக்கூட தயங்க கூடாது. இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்கா, ஐரோப்பா போட்ட நாடுகளை விட மிக மோசமான நிலைக்கு சென்று விடும்.
 
காலநிலை மாற்றம் அச்சம்
 
100 வருடங்கள், 150 வருடங்கள் கழித்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை நாம் பார்ப்போம் என நினைத்திருந்தோம். ஆனால் தற்பொழுதே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கத் துவங்கி உள்ளோம். சமீபத்தில் கூட மயிலாடுதுறை மாவட்டத்தில்  120 வருடங்கள், இல்லாத மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளது. ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்ததால் அந்த மாவட்டமே வெள்ளக் காடாகி உள்ளது. தமிழக அரசு நீர் மேலாண்மையில் முதலீடு செய்ய வேண்டும், 5 வருடங்களில் 1 லட்சம் கோடி முதலீடு செய்து , நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சென்னையை சுற்றி 10 ஏரிகளை புதியதாக உருவாக்க வேண்டும்” எனப் பேசினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget