மேலும் அறிய

கரூரில் தலைமை தபால் பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு

மத்திய அரசு இந்தியா முழுவதும் 93 ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 10 ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்கள் உள்ளதாகவும், அதில் கரூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கரூரில் ரயில்வே அஞ்சல் நிலையம் மூடப்பட்டதால், தலைமை தபால் நிலையத்திலிருந்து பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 


கரூரில் தலைமை தபால் பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வையாபுரி நகரில் ரயில்வே தபால் நிலையம் (ஆர்.எம்.எஸ்) கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் தபால் நிலையங்களில் சேகரிக்கப்படும் தபால்கள் கரூர் ஜவஹர் பஜார் தலைமை தபால் நிலையத்திற்கு கொண்டு வந்து அவை பிரிக்கப்பட்டு பெட்டிகள், சாக்கு மூட்டைகளில் கட்டி ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்து வந்தது. இரவு பகலாக செயல்பட்டு வந்த ஆர்.எம்.எஸ் அலுவலகத்தில் இருந்து ரயில்கள் மூலம் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

 


கரூரில் தலைமை தபால் பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு

இந்நிலையில் ஆர்.எம்.எஸ் தபால் நிலையம் மூடப்பட்டதால், தலைமை தபால் நிலையத்திலிருந்து தபால்களை சரக்கு வாகனம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் நடமுறைக்கு கொண்டு வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உட்பட அனைத்து கட்சியினர் கடிதங்களை திருச்சிக்கு கொண்டு செல்லக் கூடாது எனக் கூறி சரக்கு வாகனத்தில் கடித பெட்டிகளை ஏற்ற விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து, அங்கு வந்த கரூர் நகர காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

 


கரூரில் தலைமை தபால் பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு

அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வாகனத்தில் கடிதம் மற்றும் பார்சல்களை அனுப்ப வழி வகை செய்தனர். இதனை தொடர்ந்து கடிதம் மற்றும் பார்சல்களை ஏற்றிக் கொண்டு அந்த சரக்கு வாகனம் திருச்சி நோக்கி சென்றது. 

 

 


கரூரில் தலைமை தபால் பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு

அப்போது, அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொழில் நகரமான கரூரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, செட்டிநாடு சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருவதால் ஆர்.எம்.எஸ் தபால் நிலையம்  மூலம் நாளொன்றுக்கு 25000 கடிதங்கள் 24 மணி நேரம் கையாளப்படுவதாகவும், இவை திருச்சி மாற்றப்பட்டால் நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே பார்சல்கள் திருச்சி அனுப்ப இயலும், 

 




கரூரில் தலைமை தபால் பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு

இதனால் கடிதங்கள் விரைவாக சென்றடைவதில் கால தாமதம் ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு இந்தியா முழுவதும் 93 ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 10 ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்கள் உள்ளதாகவும், அதில் கரூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

அரோவில்லின் கேலக்ஸி திட்டம் : நகர்ப்புற வனப்பகுதியைச் செழுமையாக்க 10,000 மரக்கன்றுகள் நட முடிவு!
அரோவில்லின் கேலக்ஸி திட்டம் : நகர்ப்புற வனப்பகுதியைச் செழுமையாக்க 10,000 மரக்கன்றுகள் நட முடிவு!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
Annamalai : ’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Creta: SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
Embed widget