மேலும் அறிய

கரூரில் தலைமை தபால் பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு

மத்திய அரசு இந்தியா முழுவதும் 93 ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 10 ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்கள் உள்ளதாகவும், அதில் கரூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கரூரில் ரயில்வே அஞ்சல் நிலையம் மூடப்பட்டதால், தலைமை தபால் நிலையத்திலிருந்து பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 


கரூரில் தலைமை தபால் பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வையாபுரி நகரில் ரயில்வே தபால் நிலையம் (ஆர்.எம்.எஸ்) கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் தபால் நிலையங்களில் சேகரிக்கப்படும் தபால்கள் கரூர் ஜவஹர் பஜார் தலைமை தபால் நிலையத்திற்கு கொண்டு வந்து அவை பிரிக்கப்பட்டு பெட்டிகள், சாக்கு மூட்டைகளில் கட்டி ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்து வந்தது. இரவு பகலாக செயல்பட்டு வந்த ஆர்.எம்.எஸ் அலுவலகத்தில் இருந்து ரயில்கள் மூலம் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

 


கரூரில் தலைமை தபால் பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு

இந்நிலையில் ஆர்.எம்.எஸ் தபால் நிலையம் மூடப்பட்டதால், தலைமை தபால் நிலையத்திலிருந்து தபால்களை சரக்கு வாகனம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் நடமுறைக்கு கொண்டு வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உட்பட அனைத்து கட்சியினர் கடிதங்களை திருச்சிக்கு கொண்டு செல்லக் கூடாது எனக் கூறி சரக்கு வாகனத்தில் கடித பெட்டிகளை ஏற்ற விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து, அங்கு வந்த கரூர் நகர காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

 


கரூரில் தலைமை தபால் பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு

அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வாகனத்தில் கடிதம் மற்றும் பார்சல்களை அனுப்ப வழி வகை செய்தனர். இதனை தொடர்ந்து கடிதம் மற்றும் பார்சல்களை ஏற்றிக் கொண்டு அந்த சரக்கு வாகனம் திருச்சி நோக்கி சென்றது. 

 

 


கரூரில் தலைமை தபால் பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு

அப்போது, அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொழில் நகரமான கரூரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, செட்டிநாடு சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருவதால் ஆர்.எம்.எஸ் தபால் நிலையம்  மூலம் நாளொன்றுக்கு 25000 கடிதங்கள் 24 மணி நேரம் கையாளப்படுவதாகவும், இவை திருச்சி மாற்றப்பட்டால் நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே பார்சல்கள் திருச்சி அனுப்ப இயலும், 

 




கரூரில் தலைமை தபால் பார்சல்களை திருச்சிக்கு எடுத்துச் செல்ல அனைத்து கட்சியினர் எதிர்ப்பு

இதனால் கடிதங்கள் விரைவாக சென்றடைவதில் கால தாமதம் ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு இந்தியா முழுவதும் 93 ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 10 ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்கள் உள்ளதாகவும், அதில் கரூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
குடும்பத்தை விட்டு பிரிய வேண்டாம்... உங்க சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு: முழு விபரங்கள் இங்கே!!!
குடும்பத்தை விட்டு பிரிய வேண்டாம்... உங்க சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு: முழு விபரங்கள் இங்கே!!!
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
Embed widget