மேலும் அறிய

Edappadi Palanisamy: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு..!

கொரோனா விதிமுறைகளை ஆர்ப்பாட்டம் செய்தது போன்ற பிரிவுகளின் கீழ் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்ததாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனினிசாமி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். 

இந்நிலையில், திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கடந்த அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, சேலத்தில் நடைபெற்ற போராட்டாத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதனால், முன் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா விதிமுறைகளை ஆர்ப்பாட்டம் செய்தது போன்ற பிரிவுகளின் கீழ் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபின் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2021 திமுக தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளதை நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக சார்பாக சுமார் 505 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில் அதில் முக்கியமான அறிவிப்புகளை கூட செய்வோம் என அவர்கள் உறுதி தரவில்லை.

மக்களிடம் பொய்யான வாக்குறுதியை சொல்லி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது; திமுக சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்; ஸ்டாலின் முதல்வராக தேர்வான உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார்கள், ஆனால் தேர்தல் முடிந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தொடர்பாக கண் துடைப்புக்கு ஒரு கமிஷனை அமைத்து நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்; ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்யும் கையெழுத்து என்றார்கள்.

கல்விக்கடன் ரத்து குறித்தும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை அளிப்பதாகவும் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்றார்கள் ஆனால் அதையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. 5 சவரனுக்கு குறைவாக வங்கியில் அடகுவைத்த நகைக்கடன் குறைக்கப்படும் என்றும், மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறிய நிலையில் அதையும் செய்யவில்லை. அதிமுக அரசு இருந்தவரை மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும், மின்மிகை மாநிலமாகவும் இருந்தது; இன்றைக்கு அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது, அதனை சரி செய்ய வேண்டும்.

இப்படி பல வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது சூழலிலே, மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்வழக்குகளை போட்டு வருகின்றனர். ஆனால் மக்கள் தற்போது கொந்தளிப்பாக இருக்கும் இந்த நிலையில் திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவது, பொய் வழக்குகளை போடுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்கள். அதிமுக என்றும் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும், மக்கள் பிரச்னைகளை தீர்க்கும். திமுக ஆட்சியில் இருந்து இறங்கும்போது ஒரு லட்சம் கோடி கடனை வைத்துவிட்டுதான் சென்றார்கள்; கடன் வாங்குவது என்றால், அரசாங்கத்தின் திட்டங்களுக்காகவும், வளர்ச்சி பணிகளுக்காகவுமே வாங்கியுள்ளோம்; முதலீடு செய்வதற்காகவே தமிழ்நாடு அரசு கடன் வாங்கினோம்." என்றார்.

லாட்டரி சீட்டு விவகாரத்தில் தேவையில்லாத குற்றச்சாட்டை நீங்கள் வைத்துள்ளதாக திமுக விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு ”எங்களுக்கு கிடத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரவுள்ளதாக அறிக்கைவிட்டுள்ளேன்; இல்லை என்றால் அது நன்றி, ஆனால் தமிழகத்தில் லாட்டரி சீட்டு வந்துவிடக்கூடாது.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஸ்டாலினிடம் நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என கேள்வி எழுப்பினேன், அப்போது அதற்கு மழுப்பலான பதிலை சொன்னார்கள்; ஆனால் இப்போது மாணவர்களை நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என சொன்னார்கள்.

எங்களுடைய ஆட்சியில்தான் கொரோனா தொற்று இருந்தது, கொரோனா தொற்றை கடுப்படுத்துவதில் சிறந்த அரசாக அதிமுக அரசுதான் இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என திமுக தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளதே என்ற கேள்விக்கு, இப்போது ஊழல் அமைச்சரைத்தானே ஸ்டாலின் வைத்துள்ளார், அவரை ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே என பதிலளித்தார். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget