மேலும் அறிய

’’ஆட்சி மாறினாலும் காட்சி மாறலை; கோவை சிறுமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி’’- எகிறிய எஸ்பி வேலுமணி!

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாக உள்ளது. காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? - எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார். அச்சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் வற்புறுத்தி உள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுதி ஒருவர், இரண்டு கொடூரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வுக்குக் காரணமான கார்த்தி, மோகன் ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

விமர்சிக்கும் அதிமுக

இந்த நிலையில் அதிமுக இதுகுறித்து விமர்சித்துள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை நிலையச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:

’’கோவை மாவட்டம் சூலூர், பள்ளபாளையம், பாரதிபுரம் பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமி கடந்த 21.05.2026 அன்று மாலை சமூக விரோதிகளால் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்ததால், பொதுமக்களின் மிகுந்த வெறுப்புக்கு உள்ளாகினர். சமூகக் குற்றங்கள் நிகழ, போதைப் பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்தது மிக முக்கிய காரணமாக விளங்கியது. இதனால் கடந்த ஆட்சியாளர்களின் மீது பொதுமக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா?

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளது. இந்நிகழ்வில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் இது போன்ற சமூகக் குற்றவாளிகளை காவல்துறை உடனுக்குடன் கண்டுபிடித்து அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கை

தற்போது தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசின் முதலமைச்சர் வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போதை பொருட்கள் நடமாட்டத்தையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்கவும், குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடியும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று வேலுமணி பதிவிட்டுள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

’’ஆட்சி மாறினாலும் காட்சி மாறலை; கோவை சிறுமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி’’- எகிறிய எஸ்பி வேலுமணி!
’’ஆட்சி மாறினாலும் காட்சி மாறலை; கோவை சிறுமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி’’- எகிறிய எஸ்பி வேலுமணி!
CM Joseph Vijay: சூலூர் கொடூரம்!
CM Joseph Vijay: சூலூர் கொடூரம்!"மன்னிக்க முடியாத குற்றம்... குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை உறுதி!" - முதல்வர் விஜய் அதிரடி!
சிவகங்கை மாவட்ட அரசு அலுவலகங்களில் புதிதாக நிரப்பப்படவுள்ள பணிகள்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சிவகங்கை மாவட்ட அரசு அலுவலகங்களில் புதிதாக நிரப்பப்படவுள்ள பணிகள்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இணைக்கப்பட்ட உலகம்; மீண்டெழும் சமூகம் – ஆரோவில்லின் விழிப்புணர்வு நிகழ்வு
இணைக்கப்பட்ட உலகம்; மீண்டெழும் சமூகம் – ஆரோவில்லின் விழிப்புணர்வு நிகழ்வு
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
Ebola-US Ban Entry: மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
CV Shanmugam: செல்வாக்கை இழக்கும் சிவி சண்முகம்? நேரம் பார்த்து காய் நகர்த்தும் அதிருப்தியாளர்கள்!
CV Shanmugam: செல்வாக்கை இழக்கும் சிவி சண்முகம்? நேரம் பார்த்து காய் நகர்த்தும் அதிருப்தியாளர்கள்!
Vijay Vs Nainar: விஜய்யை விடாமல் வம்புக்கிழுக்கும் நயினார்; 'தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக அரசு' என விமர்சனம்
விஜய்யை விடாமல் வம்புக்கிழுக்கும் நயினார்; 'தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக அரசு' என விமர்சனம்
ஒரே சார்ஜில் 261 கி.மீட்டர் மைலேஜ்! வரப்போது Ulraviolette Tesseract இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 261 கி.மீட்டர் மைலேஜ்! வரப்போது Ulraviolette Tesseract இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Watch Video: இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? - இணையத்தில் வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?
Watch Video: இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? - இணையத்தில் வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?
CM Joseph Vijay: சூலூர் கொடூரம்!
CM Joseph Vijay: சூலூர் கொடூரம்!"மன்னிக்க முடியாத குற்றம்... குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை உறுதி!" - முதல்வர் விஜய் அதிரடி!
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Embed widget