மேலும் அறிய

ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தியது ஏற்கத்தக்கது அல்ல - மதுரை உயர்நீதிமன்றம்

’’சோழவந்தான் ஆய்வாளரை மதுரை நகர் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் மாரீஸ் குமாரின் வீட்டில் சோதனை செய்தது எப்படி? என்பது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு’’

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நான்.  முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும் ,எனது மகன்கள் மற்றும் ஓட்டுனரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜிக்கான வழக்குகளில் ஆஜரான, வழக்கறிஞர் மாரீஸ்குமார் வீட்டில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி எவ்வித அனுமதியுமின்றி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது *நீதிபதி நகைச்சுவையாக, "ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார்?*" என கேள்வி எழுப்பினார்.


ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தியது ஏற்கத்தக்கது அல்ல - மதுரை உயர்நீதிமன்றம்

அதற்கு வழக்கறிஞர் மாரீஸ்குமார், *" நாளை அல்லது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. அதன் பின்பே தெரியவரும்"* என குறிப்பிட்டார். அதற்கு நீதிபதி, ராஜேந்திர பாலாஜியின் வழக்குகளில் ஆஜரானார் என்பதற்காக வழக்கறிஞரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டது ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்டார். தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினரை செல்போன் வாயிலாக அழைத்து, வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டதை உறுதி செய்தார். அந்த குழுவின் தலைவர் சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் என்பதையும் உறுதி செய்து, அவற்றைப் பதிவு செய்து கொண்டார். பின்னர் யாருடைய அறிவுறுத்தலின் பேரில்,  வீட்டில் சோதனை செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிவபாலன் தரப்பில், மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில், வழக்கறிஞரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி, வழக்கறிஞரின் வீட்டினுள் சென்று சோதனை செய்தீர்களா? சோதனைக்கான வாரண்ட் இருந்ததா? என கேள்வி எழுப்பினார்.அதற்கு காவல்துறை தரப்பில்,"இல்லை" என பதிலளிக்கப்பட்டது.

அவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்தவையன்று நடந்தவற்றை பதில்மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து, சோழவந்தான் காவல் ஆய்வாளரை மதுரை நகர் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் மாரீஸ் குமாரின் வீட்டில் சோதனை செய்தது எப்படி? என்பது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

 


 
சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரிய வழக்கு- தென்காசி துணை கண்காணிப்பாளர் பதில் தர உத்தரவு 
 
 
தென்காசியைச் சேர்ந்த சங்கர்ராம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி தமிழரின் கலைகளில் ஒன்றான வெற்றுக்கால் சேவல் சண்டையை வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த வருடம் நீதிமன்ற வழிகாட்டலின்படி சேவல் சண்டை நடைபெற்றது. அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து விதமான முன் ஏற்பாடுகளுடன் சேவல் சண்டையை நடத்த திட்டமிட்டுள்ளோம்.  ஜனவரி 15 ம் தேதி சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. ஆகவே, தைப்பொங்கலை முன்னிட்டு வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் ஜனவரி 15ஆம் தேதி சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 

ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தியது ஏற்கத்தக்கது அல்ல - மதுரை உயர்நீதிமன்றம்
 
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டும் சேவல் சண்டை எங்கு நடைபெறுகிறது என்பதை குறிப்பிட்டு மனு வழங்காததாலும், எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நீதிபதி, "மனுதாரர்கள் தரப்பில் சேவல் சண்டையின் போது சேவலின் கால்களில் பிளேடு, கத்தி உள்ளிட்டவை கட்டப்படாது. சேவல் உயிரிழக்கும் வகையில் சண்டை நடத்தப்படாது என்பது போன்ற பல உறுதிகள்  வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, தென்காசி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஜனவரி 11ஆம் தேதிக்கு முன்பாக மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget