மேலும் அறிய

Exclusive: ஆர்.கே.நகர் பார்முலாவுடன் நடந்து முடிந்ததா தேர்தல்? - இந்த நிலை எப்பொழுது மாறும் ?

தமிழ்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் டோக்கன் வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. முடிவுக்காக தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் காத்திருக்கின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. 

மக்களவைத் தேர்தலும் தமிழ்நாடும்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி திமுக தலைமையில் அமைந்து இருந்தது.  அதிமுக - தேமுதிக கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பி.எஸ் அணி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சார்ந்த கூட்டணி போட்டியிட்டது. இதுபோக நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. தேர்தலை பொருத்தவரை, நான்கு முனை போட்டி நிலவியது. 

"தண்ணியாக செலவான பணம் "

முதற்கட்ட வாக்குப்பதிவில்லையே தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடைபெற்றது என்பதால் பிரச்சாரம் மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு, மிகவும் குறுகிய காலம் மட்டுமே இருந்தது. இதனால் பெரும்பாலான இடங்களுக்கு வேட்பாளர்கள் நேரடியாக சென்று வாக்குகளை சேகரிக்க முடியவில்லை. அதேபோன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளை கவனிக்க முடியாத சூழலும் அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஏற்பட்டது.‌ இதனால் பல தொகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு, குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு கொடுத்து வழிக்கு கொண்டு வந்தனர்.   M -பவர் சரியாக சென்ற தொகுதிகளில், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும்  தீயாய் சுட்டெரிக்கும் கைகளில் வேலை செய்தனர். M - POWER சரியாக சென்று சேராத இடங்களில் தேர்தல் நடைபெற்றதற்கு அறிகுறியே இல்லாமல் இருந்தது. வேட்பாளர்கள் போட்டிக்கொண்டு பணத்தை தண்ணியாக செலவு செய்தனர்.

வாக்காளர்களுக்கு பணம்

பெரும்பாலான தொகுதிகளில் பிரதான கட்சிகள் சார்பில், வாக்காளர்களுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. விஐபிகள்  தொகுதிகளில் ஆயிரம் ரூபாய் வரை சில இடங்களில்  கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் டோக்கன் கொடுத்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. 

டோக்கன் தொகுதி 

அந்த வகையில் ஆரணி தொகுதியில் போட்டியிட்ட , பிரதான கட்சியை சேர்ந்த புதுமுக வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகிறார். இறுதிக்கட்டத்தில் சரியாக அவர் எதிர்பார்த்த பணம் அவர்  கைக்கு வந்து சேராததால், வாக்காளர்களுக்கு பணத்திற்கு பதில் விசிட்டிங் கார்டு போன்ற ஒரு டோக்கன் கொடுத்து வாக்குகளை சேகரித்திருக்கிறார். பிரதான கட்சியை சேர்ந்த உலகத்தைப் பெயராகக் கொண்ட அவர் டோக்கன் கொடுப்பதை பார்த்து எதிர்க்கட்சினரும் உஷார் ஆகி உள்ளனர். 

காசா பணமா டோக்கன் தானே ?

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் தங்கள் பங்கிற்கு டோக்கன்களை வாரி வழங்கி உள்ளனர். ஆர்.கே.  நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றபொழுது, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் 20 ரூபாய் டோக்கன் வழங்கினார் என்ற குற்றச்சாட்டுக்கு இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே ஃபார்முலாவை கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர்களும் தங்களுக்கு வர வேண்டியதை கொடுக்காமல் டோக்கன் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என புலம்பல் சத்தமும் தொகுதி முழுக்க ஒலிக்க துவங்கி இருக்கிறது.  

ஆயிரம் தான் இருந்தாலும் ..

நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் வந்தால் இதை செய்வோம், அதை செய்வோம், அவர்கள் இப்படிப்பட்டவர்கள் இவர்கள் அப்படிப்பட்டவர்கள் என அடுக்கு மொழி வசனம் பேசினாலும், தேர்தல் அறிக்கை மூலம் மக்களை கவர்ந்தாலும், வித்தியாசமான பிரச்சாரத்தை கையில் எடுத்தாலும், வேட்பாளர்களின் கடைசி நேர நம்பிக்கை ஏன் பணத்தின் மீது செல்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. பணத்தை தருபவர்கள் எப்படி நியாயமாக நடந்து கொள்வார்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்தால் போதும் மாற்றம் தானாக பிறந்துவிடும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டுமா? – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டுமா? – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.