மேலும் அறிய

திருவண்ணாமலை மாவட்டத்தில் முழுமையாக நிரம்பிய 405 ஏரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில் 405 ஏரிகள் முழுமையாக நிரம்பியிள்ளது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்,  தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், மாவட்டத்தில் உள்ள குளங்கள் அனைத்தும் கிடுகிடுவென நிரம்பி வருகின்றது. இதனால் வயலில் தண்ணீர் தேங்குவதால் நெல் அறுவடை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் சராசரி அளவைவிட அதிகம் பெய்துள்ளது.  மேலும், எதிர்பாராமல் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையாலும் மழைப்பொழிவு அதிகரித்தது. எனவே, நீர்நிலைகள் வேகமாக நிரம்பும் நிலை ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு பரவலான கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று அதிகாலை வரை மிதமான மழை பெய்தது.

 


திருவண்ணாமலை மாவட்டத்தில் முழுமையாக நிரம்பிய 405 ஏரிகள்

தொடர்ந்து, நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதனால், திருவண்ணாமலையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஜமுனாமரத்தூரில் 4 மிமீ, வந்தவாசியில் 1 மிமீ, போளூரில் 2.00 மிமீ, திருவண்ணாமலையில் 9.30 மிமீ, தண்டராம்பட்டில் 8.0 மிமீ,  சேத்துப்பட்டில் 6.40 மிமீ, கீழ்பென்னாத்தூரில் 15.00 மிமீ மழை பதிவானது.மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின்(நீர்வளம்) கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில் 405 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. 60 ஏரிகள் முழுமையாக நிரம்பும் நிலையில் உள்ளன. மீதமுள்ள ஏரிகள் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வட்டாரத்தில் தெரிவித்தனர். மேலும்,குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 54.94 அடியாகவும், மிருகண்டா அணையின் நீர்மட்டம் 21.99 அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 57.66 அடியாகவும் உயர்ந்திருக்கிறது.

 

 


திருவண்ணாமலை மாவட்டத்தில் முழுமையாக நிரம்பிய 405 ஏரிகள்

 

அதேபோல், இந்த 3 அணைகளுக்கும் தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான விளை நிலங்களில் மழைநீர் தேங்கியிருக்கிறது. எனவே, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிரில் தண்ணீர் தேங்கியிருப்பதால், அறுவடை பாதிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, வயலில் இருந்து தண்ணீர் வடிந்ததும் நெல் அறுவடையை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து மழை வலுவடைந்தால், நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர் மகசூல் இழந்து பாதிக்கப்படும் என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.

Pudukottai: புதுக்கோட்டை சாதிய வன்கொடுமை விவகாரம்; சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன..?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.