மேலும் அறிய

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாகவே நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயம் நேரடியாகதான் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளிகள் முறையாக இயங்கவில்லை. கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் பெரும்பாலும் நிறைவடைந்ததால் எந்த இடையூறும் ஏற்படவில்லை, மீதம் இருந்த ஒரு தேர்வு மட்டும் முறையான பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.

ஆனால், பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக திறக்கப்படாமலே இருந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு இறுதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டது ஆனால், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால், தமிழகத்தில் தற்போது பள்ளிகள், கல்லூரிகள் என எந்த கல்வி நிலையங்களும் இயங்கவில்லை.


12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாகவே நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்

வழக்கமாக மார்ச் மாதத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெறுவது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,

“தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும். மாவட்டங்கள்தோறும் கொரோனா பாதிப்பு வெவ்வேறு விதமாக உள்ளது. எனவே, சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இணையவழியில் கண்டிப்பாக நடைபெறாது. நிச்சயமாக நேரடியாகவே மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் நடத்தப்படும். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்-அமைச்சர்கள், துணை முதல்வர்கள், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாகவே நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்

தமிழ்நாட்டில் இருந்து பள்ளிக் கல்வி முதன்மை செயலாளரும், நானும் பங்கேற்றோம். முதல்வர் அறிவுறுத்தியபடி பல்வேறு கருத்துக்களை நாங்கள் முன்வைத்துள்ளோம். அனைத்து மாநிலங்களும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட  மாணவர்களளை மனதில் வைத்த பேசிய நிலையில், நாங்கள் மட்டும் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களை மனதில் வைத்துப் பேசினோம். அந்த கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தேதியை மாநில அரசே முடிவு செய்து கொள்வோம் என்றும் கூறினோம்.

கொரோனா பரவல் தடுப்பு பணியில் விரும்பும் ஆசிரியர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்றும், விருப்பம் இல்லாத ஆசிரியர்களை வற்புறுத்தக் கூடாது என்றும் கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிப்பது சுலபம். ஆனால், அவர்கள் உயர்கல்வியின்போது பல்கலைகழகங்களும், நீதிமன்றங்களும் அவர்களின் தேர்ச்சியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதாலே, அவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், விரைவில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget