மேலும் அறிய

World Postal Day: உலக அஞ்சல் தினம் - சேலத்தில் 6,500 மாணவர்கள் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி

ஒரே இடத்தில் 6,500 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதங்களை எழுதினர்.

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு சேலம் உடையாபட்டி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 6,500 மாணவர்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. நவீன உலகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி தங்களது தகவல்களை பரிமாறி வருகின்றனர். இதனால் மக்களிடத்தில் அஞ்சல் மற்றும் கடிதம் போன்ற எழுத்து சார்ந்த தகவல் பரிமாற்றங்கள் குறைந்து வருகிறது. எனவே அஞ்சல் எழுதுவதின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி இன்று சேலத்தில் நடைபெற்றது. இது 6,500 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதங்களை எழுதியவர். இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம் குறித்தும், கடிதம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கடித ஆர்வலர் ஈசன் இளங்கோ மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதன்பின் மாணவர்கள் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி அஞ்சல் பெட்டியில் மகிழ்ச்சியுடன் தங்களது கடித்ததை அனுப்பினர்.

World Postal Day: உலக அஞ்சல் தினம் - சேலத்தில் 6,500 மாணவர்கள் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி

இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், “அஞ்சல் அட்டையை எவ்வாறு பயன்படுத்துவது என்று பாடத்தில் உள்ளது. ஆனால் இதுவரை நாங்கள் மதிப்பெண்காக மட்டுமே அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி வந்தோம். ஆனால் இன்று உண்மையான அஞ்சல் அட்டையில் தங்களது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. செல்போனை பயன்படுத்தி தகவல்களை பிறருக்கு அனுப்புவதை விட அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதியது புது அனுபவமாக உள்ளது. இனி வரும் காலங்களில் பண்டிகை நாட்களில் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் மூலமாக தகவல்களையும் வாழ்த்துக்களையும் பரிமாற உள்ளோம்” என்று கூறினர்.

World Postal Day: உலக அஞ்சல் தினம் - சேலத்தில் 6,500 மாணவர்கள் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி

தொடர்ந்து, கடிதம் ஆர்வலர் ஈசன் இளங்கோ கூறுகையில், "நாம் அனைவரும் இழந்து வரும், இழக்க கூடாத ஒரு பழக்கம் கடிதம் எழுதுவது. கடிதம் என்பது நினைவாற்றலையும், கற்பனையையும் வெளிக்கொண்டுவரும் பழக்கமாகும். மேலும் உணர்வு பூர்வமான விஷயங்களை பகிர்வது மூலம் மனித நேயம் வளர்க்கப்படுகிறது. இப்படி பல்வேறு வகையில் கடிதங்கள் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது விஞ்ஞான உலகின் வளர்ச்சி காரணமாக அனைத்தும் காப்பி, பேஸ்ட், டெலிட் என்று ஒன்னும் இல்லாமல் போய்விடுகிறது. செல்போன் வந்த பிறகு வாழ்த்து சொல்வது கூட யாரோ ஒருவர் அனுப்புவதை அப்படியே பிறருக்கு அனுப்புகிறோம். உணர்வு பூர்வமாக ஒருவருக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது இல்லாமல் போய்விட்டது. ஒரு மாணவன் எழுதத் தொடங்கினால் சிந்திக்க தொடங்குவான். சிந்தித்து செயல்பட்டால் அவன் சிறந்த மனிதனாக மாறுவான். அதற்காகத்தான் இன்று உலக அஞ்சல் தினத்தில் சேலம் ஹோலி கிராஸ் பள்ளியில் 6,500க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் அஞ்சல் அட்டையை வழங்கி கடிதம் எழுதுவது எப்படி எனக் கூறியுள்ளோம். மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் கடிதம் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். கடிதம் என்பது எழுதிய பதிவு செய்யப்படாத பக்கமாக வாழ்வில் வழி நடத்தும் இன்று மாணவர்களிடையே கூறியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget