மேலும் அறிய

தருமபுரியில் சாலையில் கொட்டப்பட்ட தக்காளிகள் - கிலோ 6 ரூபாய்க்கு விற்பனையாவதால் வேதனை

’’விளைச்சல் மற்றும் வரத்தும் அதிகரிப்பு காரணமாக தக்காளி கிலோ 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பனை’’

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளை விக்கப்படும் தக்காளியை விவசாயிகள், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நாள்தோறும் சுமார் 100 டன் வரை  விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
 
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி விளைச்சல் அதிகரித்து வந்தது ஆனாலும் வெளியூர் ஏற்றுமதி அதிகமாக இருப்பதால், உள்ளூர் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் தக்காளி குறைவாகவே இருந்தது. இதனால் தக்காளி விலை உயர்ந்து கிலோ 20 முதல் 25 வரை விற்பனையானது. மேலும் 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 500 வரை விற்பனையானது. இந்த விலை உயர்வால் தக்காளி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வந்தனர்.
 

தருமபுரியில் சாலையில் கொட்டப்பட்ட தக்காளிகள் - கிலோ 6 ரூபாய்க்கு விற்பனையாவதால் வேதனை
 
ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி  விளைச்சல் மற்றும் வரத்தும் அதிகரித்துள்ளது. மேலும் மார்கெட்டில் விற்பனைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிந்து கிலோ 6 முதல் 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து விவசாயிகளிடையே நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கிலோ 3, 4 ரூபாய் என அடிமட்ட விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
 
இதனால் போதிய வருவாய் கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். மேலும் விலை குறைவாக இருப்பதால், அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்கவில்லை என்பதால், ஒரு சில விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல், விவசாய நிலங்களில் விட்டு, கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்காததால், தக்காளியை விற்பனை செய்யாமல், சாலையோரங்களில்  கொட்டிவிட்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகளின் சந்தோசம் நீடிக்காமல், உடனே விலை கடுமையாக சரிந்ததால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தக்காளி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
 
 

தலைப்பு செய்திகள்

நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
Embed widget