மேலும் அறிய

Salem Temple Issue: திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திற்கு ஜாமின்

ஒரு மாதத்திற்கு மாணிக்கம் திருமலைகிரி பஞ்சாயத்துக்குள் நுழையக் கூடாது, காலை மற்றும் மாலை நேரங்களில் சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் மீறினால் ஜாமின் ரத்து.

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்ற இளைஞர், மது போதையில் நுழைந்ததாக திருமலைகிரி தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி அந்த வாலிபரை அடிக்க முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி திமுக தலைமை கழகம் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி. மாணிக்கம் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவபெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். 

Salem Temple Issue: திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திற்கு  ஜாமின்

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் பிரவீன் குமார் சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் தகாத வார்த்தைகள் திட்டிய மாணிக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனிடையே மாணிக்கத்தை விசாரிக்க காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை மற்றும் திருமலைகிரி கிராம மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாணிக்கம் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறி, சேலம் இரும்பாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்நிலைய முன்பாக அமர்ந்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிலர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Salem Temple Issue: திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திற்கு  ஜாமின்

இதையடுத்து மாணிக்கத்தின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல், ஆபாச வார்த்தைகள் திட்டுதல் உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை மற்றும் கிராம மக்கள் கூறுகையில், நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்ல விடமாட்டோம், உயிர் சேதம் ஏற்படும் என்று கிராம மக்கள் ஒன்று திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம மக்கள் இரும்பாலை காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட மாணிக்கம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஒரு மாதத்திற்கு மாணிக்கம் திருமலைகிரி பஞ்சாயத்துக்குள் நுழையக் கூடாது, காலை மற்றும் மாலை நேரங்களில் சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றும் நிபந்தனையை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனைகளுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget