மேலும் அறிய

Salem District: இரண்டாகப் பிரிக்கப்படுகிறது சேலம் மாவட்டம்? - புதிதாக உருவாகும் மாவட்டம் எது?

புதிய மாவட்டம் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமைக்குரிய சேலம் மாவட்டம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இன்று மாவட்டங்களாக உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் இணைந்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்தது. அப்போது, நிலப்பரப்பில் இந்தியாவில் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகவும், தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் இருந்து வந்தது. சேலம் மாவட்டத்தில் உருக்காலை, சேலம் ரயில்வே கோட்டம், விமான நிலையம், அனல் மின் நிலையம், சேகோ உற்பத்தி நிலையம், தாதுக்கள் மற்றும் மால்கோ என அனைத்து வளங்களையும் கொண்ட மாவட்டமாக சேலம் மாவட்டம் திகழ்ந்து வருகிறது.

Salem District: இரண்டாகப் பிரிக்கப்படுகிறது சேலம் மாவட்டம்?  - புதிதாக உருவாகும் மாவட்டம் எது?

சேலம் மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 11 சட்டமன்றத் தொகுதிகள், 6 நகராட்சி, 32 பேரூராட்சி, 30 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இத்தகைய பெருமைமிக்க சேலம் மாவட்டத்தை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் போது, மாவட்டத்தை இரண்டாக பிரித்து எடப்பாடியை மையமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பேச்சுகள் எழுந்தது.

கடந்த ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த ஊரான எடப்பாடியை தலைமையாகக் கொண்டு சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், நங்கவள்ளி சட்டமன்றத் தொகுதிகளை ஒன்றிணைத்து எடப்பாடி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சேலம் மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முந்தைய ஆட்சிக்காலத்தில் எடப்பாடி சேலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக பிரித்து அறிவிக்கப்பட்டால், பல்வேறு பொருளாதார பாதிப்புகள் சேலம் மாவட்டத்திற்கு ஏற்படும் நிலை இருந்தது.

Salem District: இரண்டாகப் பிரிக்கப்படுகிறது சேலம் மாவட்டம்?  - புதிதாக உருவாகும் மாவட்டம் எது?

குறிப்பாக, தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, சங்ககிரி கோட்டை, சேலம் விமான நிலையம், சேலம் உருக்காலை, பெரியார் பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரி போன்றவை எடப்பாடி மாவட்டத்திற்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், வணிகத்தைப் பொருத்தவரை மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனங்கள், ஓமலூர் பகுதியில் உள்ள கைத்தறி பட்டு நிறுவனங்கள், சங்ககிரியில் உள்ள லாரி உதிரி பாகங்கள், கரும்பு மற்றும் தக்காளி விவசாயம் என பல வணிகம் சார்ந்தவை எடப்பாடி மாவட்டத்திற்கு கொடுக்கப்படும் நிலை இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த முறை சேலம் மாவட்டத்தில் இருந்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதியை மையமாகக் கொண்டு ஏற்காடு, கெங்கவல்லி, வாழப்பாடி, ராசிபுரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓரிரு தொகுதிகள் சேர்க்கப்பட்டு புதிய மாவட்டம் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. பதினோரு சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டம் நிர்வாக வசதிக்காக பிரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிப்பதின் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காடு, உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவில் உள்ளிட்டவைகள் ஆத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்படும். விவசாயத்தைப் பொறுத்தவரை மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் என பல விவசாயத் தொழில்கள் உள்ள மாவட்டமாக ஆத்தூர் மாவட்டம் உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனால் அவ்வப்போது இது போன்ற வதந்திகள் பரவி வருவதாகவும், ஆத்தூரை தனி மாவட்டமாக பிரிப்பதில் சேலம் மாவட்டத்திற்கு அதிக அளவு பாதிப்பு இல்லை என்றாலும், ஒரு மாவட்டத்திற்கு தேவையான வாக்காளர்கள் ஆத்தூர் மாவட்டத்தில் இல்லை என்பதாலும், சென்னைக்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாவட்டமாக சேலம் சிறந்து விளங்கி வருகிறது. எனவே சேலம் மாவட்டத்தில் இரண்டாக பிரிக்கும் நடவடிக்கையை அரசு கையில் எடுக்கக் கூடாது என சேலம் மாவட்ட பொது மக்கள் கூறுகின்றனர்.

அரசு அதிகாரிகள் விளக்கம்:

தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள்  பிரிக்கப்படுவதாக தகவல் வந்த நிலையில், தற்போது மாவட்டங்களை பிரிப்பது தொடர்பாக எந்தவொரு திட்டமும் இல்லை என்றும், இந்த தகவல் வதந்தி என்றும் அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
John Vs Aadhav :  ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
Rajasthan Anti Conversion Bill: சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
Vengaivayal Case: என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்வளர்ப்பு மகளுக்கு திருமணம்! கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்! தந்தையாக நின்ற தருணம்”முருகனுக்கு அரோகரா” தமிழில் பேசிய மோடி! பூரித்து போன அதிபர்Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
John Vs Aadhav :  ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
Rajasthan Anti Conversion Bill: சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
Vengaivayal Case: என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
"என்ன பதில் சொல்றீங்க ஸ்டாலின்?" பெண் டிஜிபி குற்றச்சாட்டில் கோபத்தில் EPS!
NIA Enquiry: தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர் மன்னார்குடியில் தஞ்சம்.? என்ஐஏ விசாரணையால் பரபரப்பு...
தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர் மன்னார்குடியில் தஞ்சம்.? என்ஐஏ விசாரணையால் பரபரப்பு...
IND Vs ENG ODI: கம்பேக் வருமா கோலி, ரோகித்? 15 மாதங்களாக கிடைக்காத வெற்றி? இந்தியா Vs இங்கிலாந்து ஒரு நாள் தொடர்..
IND Vs ENG ODI: கம்பேக் வருமா கோலி, ரோகித்? 15 மாதங்களாக கிடைக்காத வெற்றி? இந்தியா Vs இங்கிலாந்து ஒரு நாள் தொடர்..
ADMK-TVK Alliance?: விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
Embed widget