மேலும் அறிய

தூய்மை பணியாளர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் - சேலம் மேயரிடம் கடும் வாக்குவாதம்

நீதிமன்ற உத்தரவையும் அரசு ஆணையையும் பின்பற்றாமல் மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை வஞ்சிப்பதாக கூறி மேயரிடம் கடும் வாக்குவாதம்.

சேலம் மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் தங்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நேற்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தனது கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அவர் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் படிப்பறிவற்ற பட்டியலின மக்கள் அரசு பணி பெற்ற நிலையில், டி பிரிவு மற்றும் நான்காம் நிலை பணியிடங்களை ரத்து செய்யக்கூடாது. உள்ளாட்சிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் நியமனம் செய்த அனைத்து தூய்மை தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

தூய்மை பணியாளர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் - சேலம் மேயரிடம் கடும் வாக்குவாதம்

அனைத்து தூய்மை தொழிலாளர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும். ஆயுள் காப்பீடு விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் ஆகியவற்றை வழங்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் தூய்மை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிகாரிகள் தன்னிச்சையாக செய்த பணியிட மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு கடன் மற்றும் பி.எஃப் ஆகியவற்றில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகள் மீதும் உரிய விசாரணை நடத்த வேண்டும். மோசடி செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதவிலக்கு காலங்களில் பெண் தொழிலாளர் மீது கடுமையான பணிகளை திணிக்க கூடாது. என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் எங்கே உள்ளது அருகே உள்ள திருமணிமுத்தாறு தண்ணீரில் இறங்கி 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பெண் மற்றும் ஆண் பணியாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூய்மை பணியாளர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் - சேலம் மேயரிடம் கடும் வாக்குவாதம்

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், “சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வரும் தங்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவது இல்லை. தினசரி ஊதியம் என்பது மிகவும் குறைவாக உள்ளது. பலமுறை அதிகாரிகளுக்கு இது தொடர்பாக மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இன்று சேலம் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி வாரம் தோறும் பணியாற்றும் எங்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் வார விடுமுறை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு கடன் மற்றும் பி.எஃப் ஆகியவற்றில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகள் மீதும் உரிய விசாரணை நடத்த வேண்டும். உள்ளாட்சிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் நியமனம் செய்த அனைத்து தூய்மை தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது வரை சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணாததால் ஆற்றில் இறங்கி போராட்டம் செய்து வந்த தூய்மை பணியாளர்கள், சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் துணை ஆணையாளர் அசோக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவையும் அரசு ஆணையையும் பின்பற்றாமல் மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை வஞ்சிப்பதாக கூறி மேயரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மேயரை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Embed widget