மேலும் அறிய

Salem to Hyderabad Flight: தொடங்கியது சேலம் - ஹைதராபாத் விமான சேவை - மகிழ்ச்சியில் பயணிகள்

சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் வழியாக சிங்கப்பூர், கொழும்பு, கோலாலம்பூர், அபுதாபி, தோஹா, ஷார்ஜா, குவைத் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு விமான சேவை.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சேலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு விமான சேவையை இன்று தொடங்கியுள்ளது. சேலத்தில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும் இந்த விமானமானது மதியம் 12:20 க்கு ஹைதராபாத் சென்றடையும். பெங்களூர் - சேலம் - ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத் - சேலம் - பெங்களூர் வழிகளில் விமானம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் வழியாக சிங்கப்பூர், கொழும்பு, கோலாலம்பூர், அபுதாபி, தோஹா, ஷார்ஜா, குவைத் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு விமான சேவைத் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சேலத்தில் இருந்து ஹைதராபாத் வழியாக இந்தியாவின் 30 நகரங்களுக்கும், சேலத்தில் இருந்து பெங்களூரு வழியாக இந்தியாவின் 19 நகரங்களுக்கும் இண்டிகோ நிறுவனம் விமான சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.

Salem to Hyderabad Flight:  தொடங்கியது சேலம் - ஹைதராபாத் விமான சேவை - மகிழ்ச்சியில் பயணிகள்

இதேபோன்று, உதான் திட்டத்தில் ட்ரூஜெட் நிறுவனம் மூலம் சேலம் - சென்னை விமான சேவை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி 2021 ஆம் ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சேலத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவை இயக்க வேண்டும் என சேலம் மாவட்ட பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதையொட்டி 31 மாதங்களுக்கு பிறகு சேலம் சென்னை விமான சேவை நேற்று துவங்கியது. சென்னையில் இருந்து சேலம் வந்த முதல் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, திரைப்பட நடிகை நமீதா, அவரது கணவர் உள்பட 43 பேர் சேலம் வந்தனர். அவர்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கார்மேகம் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மலர் மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். பின்னர் சேலத்தில் இருந்து மீண்டும் சென்னை திரும்பிய விமானத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உள்பட 64 பயணிகள் சென்றனர். தொடர்ந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு 12.30 மணிக்கு சேலம் வந்தடையும் எனவும் அதே விமானம் சேலத்தில் இருந்து 12:50க்கு புறப்பட்டு 1:45 மணிக்கு சென்னை சென்றடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், "சேலம் என்பது தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் மாவட்டமாக உள்ளது. தென்னிந்தியா என்று சொல்லக்கூடிய ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளி மாநிலங்களையும் இணைக்கும் சேலம் மாவட்டமாக உள்ளது. தொழிலாளர்கள் தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது. மேலும் சேலத்தில் இருந்து சிங்கப்பூர் அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கும் இனைக்கும் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தர உள்ளது. இந்தியாவில் இருக்கக்கூடிய பாம்பே டெல்லி உள்ளிட்ட விமான சேவைகளை இணைக்கும் விமான நிலையமாக சேலம் விமான நிலையம் உள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் முதல் சீரடி மற்றும் திருப்பதி செல்வதற்கான விமான சேவை ஒரு மாதத்திற்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட மத்திய போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளது. அவரும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருப்பதாக" கூறினார்.

Salem to Hyderabad Flight:  தொடங்கியது சேலம் - ஹைதராபாத் விமான சேவை - மகிழ்ச்சியில் பயணிகள்

மேலும், "சேலம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருந்தது. அதனை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் பல்வேறு நிறுவனங்கள், மருத்துவமனை, ரயில்வே கோட்டம், பல்கலைக்கழகம் என அனைத்தையும் கொண்டு வந்து பின்தங்கிய சேலம் மாவட்டத்தை மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு கொண்டு வந்தவர் கலைஞர் என யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எனவே சேலம் விமான நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விமான நிலையம் என பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். இதனை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
UP Laddu Fest: அச்சச்சோ..!  லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
UP Laddu Fest: அச்சச்சோ..! லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
Embed widget