மேலும் அறிய

‘நாங்கள் தமிழகத்தில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள்' - சேலம் ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

ஒரே நேரத்தில் நடந்த இரு வேறு முற்றுகையால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள சூரியூர் கிராமம் பகுதியில் கடந்த மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த பொதுமக்கள் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்த பகுதி வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறி அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். சூரியூர் கிராமம் வருவாய்த் துறை பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் சூரியூர் கிராமம் வருவாய் கிராமம் என்றும், வனத்துறைக்கு சொந்தமானது அல்ல என்று நீதிமன்றம் மூலமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும், அந்த இடத்தை இவர்களுக்கு ஒப்படைக்காமல் மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு கூறிவந்தனர். இந்த நிலையில், சூரிய கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்தனர். தங்களுடைய வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்ட காரணத்தால், ஒவ்வொருவரும் எங்கு செல்வது என்று தெரியாமல் உறவினர் வீடுகளிலும், சாலை ஓரங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர் . 

‘நாங்கள் தமிழகத்தில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள்' -  சேலம் ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

பல முறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகளாக இருந்து எந்த ஒரு வாழ்வாதாரமும் இல்லாமல் தற்போது வீதிக்கு வந்துள்ளதால், தன்மானத்தை விட்டு வாழ முடியாது என்ற காரணத்தால், தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்களில் அகதிகளாக தஞ்சமடைய கேரளா , கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில முதல்வர்களிடம் அனுமதி கேட்டு மனு அனுப்பி இருந்தோம். அந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில மாநிலங்கள் தங்களை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளனர். அதனால், தங்களது அடையாள ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுகிறோம். சேலம் மாவட்ட நிர்வாகம் தங்களை தமிழகத்தில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்று சான்று அளித்து தங்களை அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சூரியூர் கிராம விவசாயிகளின் இந்த கோரிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘நாங்கள் தமிழகத்தில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள்' -  சேலம் ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

இதேபோன்று சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள டி பெருமாபாளையம் பகுதியில் திருநாவுக்கரசு மற்றும் அவரது சகோதரர் கிருபாகரன் ஆகிய இருவரும் கந்துவட்டி மற்றும் ரவுடிசம் செய்து கிராம மக்களை மிரட்டி வருவதாக கூறி, 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் ரவீந்திரன் கந்துவட்டி கொடுத்து மிரட்டி வருவதை தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அவரை திருநாவுக்கரசு மற்றும் கிருபாகரன் ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கியதில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குற்றம்சாட்டினர். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே நேரத்தில் நடந்த இரு வேறு முற்றுகையால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget