மேலும் அறிய

12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முல்லை நகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகா கும்பாபிஷக விழா - முழு விவரம்

முல்லை நகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் முல்லை நகர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டப மகா கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை (08.05.2022) மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகி மோகன்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முல்லை நகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. இதனையொட்டி, வரும் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணத்துடன் விழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு நெடுஞ்சாலை நகர் வரசித்தி விநாயகர் கோவில் முன்பிருந்து தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் கேரள செண்டை மேளத்துடன் தய்யம் ஊர்வலம் நடைபெறும். பாரம்பரிய சிலம்பக் கலையை போற்றிடும் வகையில், 50 மாணவர்கள் சிலம்பம் ஆடிய படி ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றனர். மேலும், பசு மற்றும் குதிரையுடன் முளைப்பாரி ஊர்வலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளது. ஊர்வலம் முல்லைநகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில் நிறைவடையும்.

 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முல்லை நகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகா கும்பாபிஷக விழா - முழு விவரம்

2 ஆம் நாள் சனிக்கிழமை நடைபெறும் விழாவில் மூன்று கால யாக பூஜைகள் பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 7 மணிக்கு மால்குடி சுபா அவர்களின் பாபாவின் கானமழை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 9 மணிக்கு கோபுர கும்பாபிஷேகமும், 9.30 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பரிவார கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு வீரமணிராஜூ அவர்களின் இன்னிசை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு இசைப்பள்ளி மாணவியரின் வீணை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு ஷீரடியில் நடைபெறுவது போல சாவடி ஊர்வலம் நடைபெறுகிறது. புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முல்லை நகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகா கும்பாபிஷக விழா - முழு விவரம்

வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இரண்டு இடங்களில் தொடர்ச்சியாக அன்னதானம் நடைபெற உள்ளது. மூன்று வேளைகளில் உணவும், மற்ற நேரங்களில் பிரசாதமும் அன்னதானப் பந்தலில் பக்தர்களுக்கு வழங்கப்படும். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும், சாய்பாபா லேமினேட்டட் புகைப்படம், உதி, பால்கோவா, இனிப்பு, ஷீரடியில் வழங்கப்படும் ரேவடி பிரசாதம் கொண்ட பை வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் பக்தர்களுக்கு இந்த பிரசாத பை வழங்கப்பட உள்ளது. கும்பாபிஷேக விழாவினையொட்டி, சாய்பாபா கோவிலில் வெள்ளிக்கிழமை முழுக்க மலர்களால் அலங்காரமும், சனிக்கிழமை இலைகளால் அலங்காரமும், ஞாயிற்றுக்கிழமை பழங்களால் அலங்காரமும் செய்யப்பட உள்ளது. கும்பாபிஷேக விழாவினையொட்டி ரத்த தான முகாம், தடுப்பூசி முகாம், முதலுதவி முகாம் மற்றும் தேவையான இடங்களில் நீர் மோர் பந்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று நாட்கள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பக்தர்கள் பங்கேற்று சாய் அருள் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
Watch Video: அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழேவிழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
Breaking News LIVE: சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் - கே.என் நேரு
Breaking News LIVE: சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் - கே.என் நேரு
"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
Watch Video: அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழேவிழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
Breaking News LIVE: சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் - கே.என் நேரு
Breaking News LIVE: சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் - கே.என் நேரு
"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
Watch Video: அன்று சந்திரபாபுவின் வீடு, இன்று ஜெகன் மோகனின் அலுவலகம்- ஆந்திராவில் அனல்பறக்கும் பழிவாங்கும் அரசியல்?
Watch Video: அன்று சந்திரபாபுவின் வீடு, இன்று ஜெகன் மோகனின் அலுவலகம்- ஆந்திராவில் அனல்பறக்கும் பழிவாங்கும் அரசியல்?
Embed widget