Salem power shutdown: சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்டில உங்க பகுதியும் இருக்கா ?
Salem power cut (26-05-2026): சேலம் மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தின் முக்கியத் துணை மின் நிலையங்களில் நாளை (26.05.2026) அவசரக் காலப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வேம்படித்தாளம் துணை மின் நிலையம்
மின்தடை நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
மின்தடை பகுதிகள்:
- சுமங்கலி நகர்
- சித்தேஸ்வரா நகர்
- சந்தைப் பேட்டை
- பூங்கா நகர்
- பாப்பாபட்டி
- இடங்கணசாலை
- கே.கே.நகர்
- சுண்டெலி பெருமாள் கோவில்
- வேம்படித்தாளம்
- கோட்டை புதூர்
2. அஸ்தம்பட்டி துணை மின் நிலையம்
மின்தடை நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மின்தடை பகுதிகள்:
- டி.ஐ.ஜி., அலுவலகம்
- லட்சுமி சுந்தர் நகர்
- சிறைச்சாலை பின்புறம்
- எஸ்.பி.ஐ., காலனி
- அம்மா உணவகம்
- பிரிட்ஜ் ரோடு
- செரி ரோடு
- அஸ்தம்பட்டி ரவுண்டானா
- ஜான்சன்பேட்டை
- இட்டேரி சாலை
- பிரபு நகர்
- அம்மன் நகர்
- காந்தி சாலை
- லட்சுமிபுரம்
- விஜயராகவாச்சாரி யார் நகர்
- மரவனேரி
- வின்சென்ட்
- ஏ.ஆர்.லைன்
- கோர்ட் ரோடு
- சங்கர் நகர்
- சகாதேவபுரம்
- ஆர்.ஆர்.முனியப்பன் கோவில் நகர்
3. உடையாப்பட்டி துணை மின் நிலையம்
மின்தடை நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மின்தடை பகுதிகள்:
- மாசிநாயக்கன்பட்டி
- சக்தி நகர்
- காசி நகர்
- மீனங்காடு
- வரகம்பாடி
- இந்திரா நகர்
- சிந்தாமணி நகர்
- நொச்சிப்பட்டி
- ராம் நகர்
- ஏரிக்காடு
- பாறைக்காடு
- குண்டுக்கல்லுூர்
4. கருப்பூர் துணை மின் நிலையம்
மின்தடை நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மின்தடை பகுதிகள்:
- ஆணைகவுண்டம்பட்டி
- கோட்டகவுண்டம்பட்டி
- சாமிநாயக்கன்பட்டி
- செல்லபிள்ளை குட்டை
- புளியம்பட்டி
- பெருமாள் கோவில்
- மாங்குப்பை
- கிளாக்காடு
- 5 ரோடு
- குரங்குச்சாவடி
- நரசோதிப்பட்டி
- பாரதி நகர்
- சிவாய நகர்
- கே.வி.எஸ்., நகர்
- நகரமலை அடிவாரம்
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















