மேலும் அறிய

Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை

விபத்தில் உயிரிழந்த சேகோ தொழிலாளியின் குடும்பத்தினருக்கு அஞ்சலக காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

அஞ்சல் துறையின் சார்பில் ஆண்டுக்கு ரூ.550 செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு வழங்கும் திட்டம் சேலம் மாவட்டத்தில் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த சேகோ தொழிலாளியின் குடும்பத்தினருக்கு அஞ்சலக காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு தனியார் ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சிறப்பு விபத்து காப்பீட்டு திட்டத்தை அஞ்சல் துறை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த வகையில், அஞ்சல் துறையின் சார்பில் ஆண்டுக்கு ரூ.550 செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற காப்பீட்டு திட்டங்களை விட இந்திய அரசின் அஞ்சல் துறை மிகக் குறைந்த விலையில் விபத்து காப்பீட்டினை வழங்கி வருகிறது. இதனால் சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். சேலம் மாவட்டம் மல்லூரில் உள்ள தனியார் சேகோ நிறுவனத்தில் பணியாற்றி வரும் 600-க்கும் மேற்பட்டோர் அஞ்சலக காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதற்கான வருடாந்திர பிரிமீயத் தொகையினை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமே கட்டி வருகிறது.

இதனிடையே இந்த தனியார் சேகோ நிறுவன ஓட்டுநர் ராஜேந்திரன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் பணி முடிந்து வீடு திருப்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, அவருடைய குடும்பத்தினருக்கு அஞ்சல் துறையின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட உதவிக் கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் வழங்கினார். 

Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட உதவிக் கண்காணிப்பாளர் பரமேஸ்வரன், மிகக்குறைந்த பிரிமீயத்தில் ரூ.10 லட்சத்திற்கான விபத்துக் காப்பீட்டுத் தொகையைத் தரும் அஞ்சல் துறையின் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் சேலம் கிழக்குக் கோட்டத்தில் மட்டும் 4700 சேர்ந்துள்ளனர். மக்கள் அனைவரும் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும். விபத்தில் உயிரிழப்பு நேரிட்டால் அவர்களுக்கு ரூ.10 லட்சத்துடன், அவர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவிற்கு மேலும் ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்படும் என்றார். இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் விபத்தினால் ஏற்படும் சிறிய காயங்கள் முதல் காப்பீட்டு தொகையை பெற முடியும். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவ செலவிற்கு ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய அஞ்சல் வங்கியின் முதுநிலை மேலாளர் நல்லவள்ளிராஜா, தனியார் சேகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Embed widget